வினாடி இன்பம்

This entry is part 21 of 51 in the series 3 ஜூலை 2011

 

மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம்

முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம்

அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை

சிக்னலில் நின்றது வாகனங்கள்

குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன்

குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள்

முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு

சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது

நான் வாசித்ததிலேயே இன்றளவும்

சிறந்த கவிதை அது தான்

 

 

Series Navigationபருவமெய்திய பின்தன் இயக்கங்களின் வரவேற்பு

1 Comment

  1. Avatar l.rengarajan

    naan ninaithu ninaithu rasithu paditha kavitahi, nandru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *