பயணங்கள் முடிவதில்லை

This entry is part 13 of 28 in the series 12 ஏப்ரல் 2015
 
மனிதர்களுக்கென்ன 
ரயிலேறிப் போய்விடுகிறார்கள் 
 
கசிந்த கண்ணீருக்கும் 
குலுக்கிய கைகளுக்கும் 
மென்தழுவலுக்கும் 
மௌன சாட்சியாய்க் கிடக்கும் 
நடைமேடையையும் 
உயரத் தூண்களையும் 
கழிப்பறை வாடை கருதாமல் 
பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 
நிற்கும் 
பெயர் தெரியா இம்மரத்தையும் 
என்ன செய்வது…..
-உமாமோகன்
Series Navigationவிதிவிலக்குஅப்பா எங்க மாமா

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *