ஆட்கொல்லி

This entry is part 4 of 13 in the series 29 மார்ச் 2020
image.png

சி. ஜெயபாரதன், கனடா

ஆட்கொல்லி , ஆட்கொல்லி

நச்சுக் கிருமி இது !  

உடனே கொல்லாத

நாட்கொல்லி  இது !

யுகப்போராய்

ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும்

காலக் கிருமி இது !

மனிதரால் உண்டாகி,

மனிதரால் பரவி,

மனிதரைக் கொல்லும் கிருமி இது !

உலகை ஒன்றாக்கி,

ஒருவரை ஒருவர் மதித்து,

உதவி செய்ய இணைத்த கிருமி  இது !

ஒளிந்திருந்து சில நாளில்

உயிரைக் குடிப்பது !

கடவுளுக்கு அஞ்சாதவன்

குடலும் நடுங்குது !

குவலயம் ஒடுங்குது !

கத்தியின்றி

ரத்த மின்றி யாவரும் புரியும்

யுத்தமிது !

செத்துப் போவார்

சிலர் !

பித்துப் பிடிப்பார் சிலர் !

நித்தம் தவிப்பார்

சிலர் !

ஜாதிப் போரில்லை  இது !

மதப்போ ரில்லை !

இது இனப்போரில்லை !

ஊமைப் போராய்த் துவங்கி

உலகப் போராய்

இமைப் பொழுதில் மூண்டு

விசுவரூபம் எடுத்த

அசுரப் போர் இது !

ஆட்கொல்லி,  நாட்கொல்லிக்கு

வேட்டு வைப்பது

எப்படி ?

+++++++++++++++++++++++++++

Series Navigationதமிழின் சுழிவதுவை – குறுநாவல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *