பூஜ்யக் கனவுகள்

This entry is part 5 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

வசந்ததீபன்

_________________________________

பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு

மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது

பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை

முகிழ்த்துகிறது

நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது

ஆட்கள்  ஓடி  வந்தார்கள்

உடல்கள்  தவிர  எல்லாம்  களவு  போனது

சொல்  விஷம்  பருகினாள்

நாக்கில்  பாம்புகள்  துள்ளின

வானத்தைப்  பிடிக்க  வலை  வீசினேன்

சில  மேகங்கள்   மட்டும்    சிக்கின

கையில்  எடுக்கையில்  பறந்து  போய்விட்டன.  போனது  வாழ்க்கை

காட்டுக்கிழங்கைத்  தேடி  அலைகிறான்

புளிச்சிப்பழங்களை  வேட்டையாடுகின்றன  மணிப்புறாக்கள்

பசி  பிடுங்கித்  தின்ன  

வேடிக்கை  பார்க்கிறான்.

புன்முறுவல்  காட்டினால்  புன்னகைப்பேன்

வணக்கம்  சொன்னால்  வணங்குவேன்

எளிய  மனிதனுக்கு  எந்தவித  எதிர்ப்பார்ப்பும்  இல்லை

போராளி  போராளி  என்று  பீற்றுகிறான்

போராட்டமென்றால்  பதுங்கு குழி  தேடுகிறான்

பதுங்கித்தான்  புலி  பாயுமாம்

தனிமையைக்  குறித்து  வருத்தப்படுகிறேன்

என்னை  நினைத்து  தனிமை  ஆதங்கப்படுகிறது

எங்களைப்  பற்றி  எவரும்  வேதனைப்படவேண்டாம்

முகத்தில்  பல  முகமூடிகள்

தலையில்  கனத்த  கிரீடம்

பத்துகாசுக்கு  பிரயோஜனமில்லை  என  புலம்பும்  எழுத்தாள  சக்கரவர்த்தி(னி)கள்

தேவதைகள்  அரக்கர்களிடம்  சிக்குகிறார்கள்

தேயும்  நிலவாய்  சிதைக்கப்படுகிறார்கள்

திடீரென்று  காணாமலாக்கப்படுகிறார்கள்.

🦀

வசந்ததீபன்

Series Navigationகுளிர்வித்தால் குளிர்கின்றேன்அசோகமித்திரனின் “ஒற்றன்”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *