ரவி அல்லது
சிரிப்பையும்
சிநேகமாக
சிந்தியப் பார்வையும்
சேகரமாக்கி
அந்தி வரை
வைத்திருந்தேன்.
வராது போன
உனக்கு
சேருமிட வழிகள்
அநேகமிருக்கலாம்
எளிதாகிப் போன
பயண உபாயங்களில்.
வாரிச் சுருட்டி
அள்ளி எடுத்த
இரக்கங்கள்
யாவும்
சில்லறைகளாக
கனத்தது
சலவை செய்யாத
அன்றாடத்தின்
நடையில்.
இனியொரு பொழுதும்
நிமிரக் கூடாது
ஏந்தும்
கைகளைத் தவிர எப்பொழுதுமென
சங்கல்பங்களாயிரம்
கொண்டாலும்
இஞ்சித் தின்னாத
மனம்தான்
கேட்பானே என்கிறது.
மகளையொத்த
சாயலில்
கடந்துபோன
சிறுமிக்காக
ஏங்கி.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12