மகிழ்ச்சி மறைப்பு வயது

This entry is part 13 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025



                           பா.சத்தியமோகன்

நனைகிறேன் பரவசமாய்
காதுமடல்,கண் இமை, சட்டை
எல்லாமாக நனைகிறேன்
தெரிந்தவர் எவரேனும் எதிர்பட்டு
“ஏன் சார் நனையறீங்க?” எனக் கேட்பதற்குள்
முழுதுமாய் சொட்டச் சொட்ட
நீள தார்ச்சாலையில் ஆசையாய் நனைந்தபடி
ஓடும் போக்குவரத்து பஸ் டயர்கள்
வாரி வீசும் சாலை மழை நீர்
பக்கவீட்டில் வீசும்போது
கடந்துவிட வேண்டும்
தற்செயல் போல் நனைந்துகொள்ளவும் வேண்டும்!
இந்த மகிழ்ச்சியெல்லாம் மனக்குதிப்பெல்லாம்
அங்கங்களில் காட்டி
ஆறு வயதில்
அப்பாவிடம் அடி வாங்கிய சுகம்
உள் நெஞ்சில் வசிக்க
தற்சமயம் மறைக்கிறேன் தந்திரமாய் கண்படாமல்
குழந்தையாயிருக்க சமூகத்தில் அனுமதியில்லையே
“தாத்தா சேற்று தண்ணீல நனையறார் பார்!” என்பார்கள்.
***

Series Navigationகவிதைகள்அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *