அது

This entry is part 9 of 44 in the series 30 அக்டோபர் 2011

நடுநிசியில்
யார் கதவைத் தட்டுவது
பிரமையா
தூக்கம் வராத
இரவுகளை எதிர்கொள்கையில்
நரகம் பற்றிய பயம்
அதிகரிக்கின்றது
சிநேகிதர்கள் ஒவ்வொருவராக
பிரியும் போது
கதவைத் தட்டியது
எமன் தானோ என்று தோன்றுகிறது
பருவத்தில் படமெடுத்து
ஆடிய மனது
இன்று பயந்து பம்முகிறது
மனம் பக்குவமடைந்துள்ளது
அடுத்தவரின் அந்தரங்கத்தை
அறிய இப்போது
ஆளாய் பறப்பதில்லை
செய்த தவறுகளால் ஏற்பட்ட
குற்ற உணர்ச்சியே
என்னைக் கொன்றுவிடுமோ என
பயமாய் இருக்கிறது
அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன்
வாடினால் தான் மலரென்று
செத்தால் தான் சுகமென்று.

Series Navigationமழையாகிவிட்ட தவளையின் சாகசம்போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?
author

ப மதியழகன்

Similar Posts

Comments

  1. Avatar
    chithra says:

    அகஸ்மாத்தாக தெரிந்து கொண்டேன்
    வாடினால் தான் மலரென்று
    :) nice..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *