பாவங்கள்…

நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்... ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் கொடுக்க கைகள் இல்லை அன்பென்பது வெறும் வார்த்தையாய்... உண்டு உறங்கி எழுந்து இருந்து மிச்ச சுழற்சியில்  சுழன்று சுழன்று…

ஊமை மரணம்

சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச... காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி பறைக் கிழிக்க காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்... கண் அசைவில் மொழி பகிரவும் நீ விரும்பவில்லை விழிகளை துளைத்தெடுத்தேன்…

மீந்த கதை!

வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு... வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் பற்கள் இடுக்கில் சிக்கிய உணவு போல ஒவ்வொரு நொடியும் மீந்த கதை சொல்ல மட்டுமே முடிகிறது நம்மால்... தினேசுவரி,…

வம்பளிப்புகள்

-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்…..   அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ கண்டுப்பிடித்து விடுகின்றனர் சில ‘வம்பளிப்புகளை’… வம்பாகி போகும் போது தெளிகிறது அளிப்புகளின் இறுதி வாசல் அழிப்பே என்று………  …