சுப்ரபாரதிமணியன் ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும் போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்.. இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா […]
சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . […]
சுப்ரபாரதிமணியன் பருத்தியும் தேயிலையும் சுற்றுலாப் பேருந்தில் குவாஹாட்டியில் சுற்றும் போது அடிக்கடி பருத்தி பல்கலைக்கழகம் கண்ணில் பட்டது. விவசாயக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கேள்விப்பட்ட்துதான். இது என்ன புதிதாய் .. இது இருக்க வேண்டிய இடம் கொங்குப்பகுதியல்லவா என்ற எண்ணம் வந்தது (முன்னர் காட்டன் கல்லூரி என அறியப்பட்டது) என்பது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டியில் அமைந்துள்ள ஒரு பொது மாநில பல்கலைக்கழகம் ஆகும் . […]
சுப்ரபாரதிமணியன் (வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மார்ச் 2022 மாதத்தில் காணப்பட்ட செய்தியைக் கவனியுங்கள் ) அசாம் மாநிலம் …ரெயிலில் 4 மணி நேரமாக ஆண் சடலத்துடன் பயணிகள் பயணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் சடலத்தை மீட்டு ரெயில்வே போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அசாம் மாநிலம் கில்சாரில் இருந்து கோவைக்கு வாரந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி கில்சாரில் இருந்து அந்த ரெயில் புறப்பட்டது. அசாமை சேர்ந்த […]
சுப்ரபாரதிமணியன் அத்யாயம் நான்கு தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது அது கவுகாத்தியில் காமக்யா கோவில். எங்கள் சுற்றுலாக்குழுவில் இருந்த ஒரு மூத்தப் பெண்மணி சக்திஅம்மனின் ஒவ்வொரு உடல் பாகங்களும் ஒவ்வொரு ஊரில் வீசப்பட்டதாயும் அதில் அவரின் உதடு இங்கு வந்து வீழ்ந்து இந்தக்கோயில் உருவாகியிருப்பதாயும் சொன்னார். இன்னொரு சாமியாரிடம் கேட்டபோது அவர் போதை போல் இருந்த கணத்தில் அது உதடல்ல, உதடல்ல.. உதடு போல் இருந்த இன்னொரு உறுப்பு யூகியுங்கள் […]
For my part I travel not to Go anywhere, But to go I travel for Travels sake The great affair Is to move – Robert Louis Stevenson ( 115 issue Feb 2022 ) ( Read during Chennai to Calcutta Indigo flight Indigo magazine ) —-1—- பூமியின் பாடல்கள்” என்ற தலைப்பில் […]
சுப்ரபாரதிமணியன் வீட்டு விலங்குகள் தடை செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது. சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர் கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித் தலையைத் திருப்பி அவரைப்பார்த்தது. அதன் குரலில் அபயம் கேட்கும் பிச்சைக்காரத்தனம் இருந்தது. “ இந்த வீட்டில் தடை செய்யப்பட்டதா இது இருந்தது. வேறெ எதையும் காணம். விட்டிருவமா. இன்னமும் தேடுவம் “ பூனையின் மியா கதறலும் சற்றே திமிறிக்கொண்டிருந்ததும் அந்தக் காவல்துறைக்காரருக்கு எரிச்சலைக்கிளப்பியதை அவரின் முகம் தெரிவித்தது. அவரின் காலடியில்பட்டு உருண்ட […]
சுப்ரபாரதிமணியன் ( ஜெ. அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது) முத்தச்சி கதை : அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது. இன்னொரு துண்டு மாமிசத்தை படையலில் இருந்துப் பிரித்தெடுத்த செல்வ சாம்பன் அவளின் பூரித்த முகத்தைப் பார்த்தபடியே கொண்டு சென்றான். படையலில்., நைத்தியத்தில் மாமிசம் படைப்பது வழக்கமாகத்தான் இருந்தது. படையல் மாமிசத்தின் மணம் செல்வ சாம்பனின் நாசிகளையும் நிறைத்தது. பிராமணர்கள் ஒழுங்குடன் படையலைப் […]
வணக்கம் 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும் இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டனர். ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அரபிமொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.. அதை கேரளாவைச் சார்ந்த லிலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது அவர் கலந்து கொள்ள இயலவில்லை. சுமார் 60 மலையாள பதிப்பக அரங்குகள் இருந்தன […]
சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றிய வித்தை இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, அந்த காலகட்டத்தில் ஜெயந்தன், கி ராஜநாராயணன் இருவரும் என் உரைநடையின் முன்னோடிகளாக அமைந்தார்கள் ,.தொடர்ந்து அவரின் படைப்புகளை வாசித்து வந்தேன் என் முதல் சிறுகதை தொகுப்பை […]
பின்னூட்டங்கள்