வளவ. துரையன் நான் உன்னை முழுதும்மறந்துவிட்டதாகநினைக்கிறேன்.ஆனாலும்உன் நினைவுகளெல்லாம்பலாச்சுளைகளைமொய்க்கப் பறந்து வரும்ஈக்களாக வருகின்றன.தண்ணீரில் மிதக்கவிட்டக்காகிதக் கப்பல்கவிழ்ந்து விடுமோவெனக்கலங்கும் சிறுவனின்மனமாய்த் தவிக்கிறேன்.மலர்த்தோட்டத்தில்எல்லாமேமணம் வீசினாலும்மனத்தில் ஒன்றுதானேவந்தமர்கிறது.இறுதியில் முன்னால்ஓடுபவனைவெற்றி பெற விட்டவனாய்த்தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
வளவ. துரையன் எனக்குத் தெரியும்நீ எப்பொழுதும்உண்மையை நேசிப்பவன்.மண்ணால் சுவர் வைத்துபுறஞ்சுவருக்கு அழகாகவண்ணம் தீட்ட எண்ணமில்லை.வார்த்தை அம்புகளைத்தடுக்க உன்னிடம்வலுவான மனக் கேடயம்வாழ்ந்து கொண்டிருக்கிறது.பொய் மழை பெய்கையில்முழுதும் நனைந்தாலும்புறந்தள்ளிப் போகிறாய்.எதிரி நாகங்களைஎதிர்கொள்ளக் கைவசம்ஆடும் மகுடி உண்டு.ஆனால்துளைத்திடும் முள்கள் கொண்டதோள்களால் தழுவுகையில்என்ன செய்வது?
வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.
—வளவ. துரையன் நான்கு கரைகளிலும் நாணல்கள் படிக்கட்டுகள் இல்லையெனினும் சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும் காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ எப்பெயரிட்டு அழைத்தாலும் எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின் மத்தியான வேளையில் மேய்ப்பவர்களுக்கு அதுதான் சொர்க்கம். இப்போது நீவரும் பாதையெல்லாம் அடைபட்டுப் போனதால் நீரும் வழி மறந்து போயிற்று. பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால் பயனற்றுக் கிடக்கிறது. ஆண்டுதோறும் வரும் வலசைப் பறவை மட்டுமிங்கே ஓரமாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது
வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போகின்ற பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும் குளம்போல் குவித்துவைத்து ஏந்தினாலும் விரலிடுக்குகளின் வழியே கசியும் போகும் நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட இல்லாமல் வீணே பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் நல்ல ஊஞ்சலும் நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சி வெளிச் செல்ல மூடப்பட்ட சன்னல்களில் முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே அவ்வப்போது விட்டுவிடு. வழிகிடைக்கும்
வளவ. துரையன் இருளைக்கண்டுதான் இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம் தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிட வெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும், வெளிச்சம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு போதை விளக்கு. எப்பொழுதும் அது அணைந்து விடலாம். எனவேதான் வெளிச்சத்தைக் கண்டு நான் அச்சமடைகிறேன்.
வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்
வளவ. துரையன் வண்டியில் பூட்டப்பட்ட காளை அடுத்த பயணத்திற்குத் தயாராக இழுக்கிறது. சுமை சற்று அதிகம்தான். நுகத்தடியைத் தாங்கும் இடத்திற்கு மேலே கழுத்தில் இருக்கிறது சிறு புண். கவனமாக அதைப் பார்த்துக் காக்கை கொத்துகிறது. காளையின் கவலை காகம் அறியாது. வாலால் அடிக்க இயலாமல் முடிந்தமட்டும் தலையை ஆட்டிப் பார்க்கிறது காளை. விலகி விலகிப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொத்தி வாழ்க்கையைக் கற்றுத் தருகிறது காக்கை.
வளவ. துரையன் உன் கவிதைகளில் நான்தான் இருக்கிறேன் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். சுருள்முடியும் நான்விடும் சுருள் புகையும் எப்படிச் சுற்றிச் சுற்றி அங்கே இடம் பிடித்தன. அன்று நகருந்தில் என் காலை மிதிப்பது தெரியாமல் மிதித்து ரணமாக்கி ரத்தக் கண்ணீர் வடித்தாயே. அருகருகே தோளுரசி நடக்கும்போது இருவரும் கைகள் கலந்தும் கலக்காமலும் போனதையும் கவிதையாக்கி இருக்கிறாய். ஆனால் கல்லிலிருந்து தலை நீட்ட மறுக்கும் பாம்புக் குட்டியாய் நீ பரிதவிப்பது தெரிகிறது. நீ ஒப்புக் கொள்ளாவிடினும் உன் உள்மன […]
பகலிலேயே வந்து மூடும்இந்த இரவை என்னென்று சொல்வது? கிளிகள் பழமுண்ணாமல்பரிதவித்துத் தவிக்கின்றன. தன் புண்னைக் கொத்தவரும்காக்கையை விரட்ட முடியாமல்காளை தலையை ஆட்டிப் பார்க்கிறது. ஆந்தையின் மகிழ்ச்சியைஅந்தப் பொந்தினுள் கண்டேன். இரவின் இருளுக்குக்கருமையென்றும்நீலமென்றும்வண்ணம் வடிக்கிறார்கள். பகலை விட்டுவிட்டுஇரவு மெதுவாகவெளியே ஏறும்போதுநிலவு வந்து கொண்டிருந்தது. இப்போதுதான்அந்தக் கள்ள இரவுஉண்மையில் வந்து தீர வேண்டும். இந்த நிலவின் ஒளியில்அப்போதுதான்இரவை விரட்டி அடித்துஇன்பம் அள்ளலாம்.