இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி சிக்கலாகுகையில் சுவாசமோர் விசையில் மென்காற்றாகவோ புயல்மழையாகவோ ஏன் பெருமூச்சாகவும் இருத்தல் கூடும் . ஒரு கயிற்றின் வழியில் இரு முனைகளாக வழிந்தோடுமவை வெவ்வேறு கோணங்கள் தீண்டி ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக மீளவும் சிக்கல்கள் பிரிக்கப்படாமல் அவள் மற்றும் அவன் …. -ஷம்மி முத்துவேல்
சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் … எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து போகிற ஏதேனுமொரு திசையில் குறுக்கிடும் காகத்திற்கு தெரியாது எதிர்பார்புகளின் குவியலோடு அலையும் வாழ்வு பற்றி -கவிதா ரவீந்தரன் (kavitharaveendar@yahoo.co.in)
எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள் தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று . உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல மற்றவர்களை பின்பற்றுதல் தொன்மை தொட்டு வளர்த்து விடுகின்றன பல ஒளி ஆண்டுகளின் கனவு ஒன்று . அதிலும் அவர்கள் கனவில் வாழாமல் என் கனவில் வாழ்வதென்பது அருவருப்பானது,அவமானமானது அப்படி மற்றவர்களின் பிம்பமாகவே இருக்க உனக்கும் தொன்மையான வாழ்வின் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றதா? தன் இயல்பை தானே […]
மிருதுவாக்கிய அடி நுனி ஆணியை நடுநாக்கில் தொட்டெடுத்து சொடுக்கிச் சுழற்ற தரையில் மிதக்கிறது வண்ணக் குமிழி. சாட்டைக் கையிற்றில் எத்திஎடுத்து உள்ளங்கையில் விடுகிறான். அட்சய ரேகையிலிருந்து இடம் மாறி சிறுவனது ஆயுள்ரேகையின் மீது பயணிக்கிறது சுழலும் பூமிப்பம்பரம்.
கனவுகள் மேலிமைக்குள்ளிருந்து கீழிமைவழி கசிந்தன. புத்தக வாசத்தோடே பலகனவுகளும். அச்சிலிடப்பட்ட சிறுபத்ரிக்கையும் ஆளையடித்துத் திரிசங்காக்குகிறது இன்னும் பேர்காணும் பேரின்பம் வேண்டி. பெரிய விதையாயிருந்தும் கிளைப்பது சின்னச்செடி தலை சுற்றிப் பார்க்கிறது சிறு விதை விருட்சங்களை. வீரியம் அடக்கின செடிகளுக்கு வெடித்தபின் வாய்க்கிறது எட்ட நினைத்த உயரம் அளந்து வைத்த அளவு. ரோஜாக்கள் மரமாவதில்லை மாட்சிமை விருது பெறுவதில்லை எனினும் கிடைக்கிறது விருதளிப்பவரின் இதயத்தில் இடம் புத்தக அடுக்குகளூடே ஒரு சோடா புட்டிக் கண்ணாடியும் ஒரு புதைகல்லறையும் கிடைக்கப்பெற்றவர் […]
அழுகைக்கு ஆர்தலாய் வாங்கப்படுகிறது சிறுமிக்கான ஒரு பலூன்…. நாள் எல்லாம் விளையாடிய களைப்பில் ஓய்வெடுக்கின்றனர் கட்டியில் சிறுமியும் ஜன்னலில் பலூனும்…. மின்விசிறி காற்றில் கசிந்து கொண்டிருந்தது பலூன்காரனின் வாய்காற்று….
ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை..
ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக் கவனிக்க ஏலாமல் யார் யாரின் அந்தப்புரத்துள்ளோ அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் ராஜாக்கள். சிரச்சேதம் செய்யப்படலாம்.. சேதமுற்றே திரிவோர்க்கு சிரச்சேதம் பெரிதா என்ன.. ராஜாக்கள் கூஜாக்களாய் பின் கோமாளிகளாய்..
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நள்ளிரவுப் பொழுதில் துள்ளி அலறினேன் : “நான் கொண்டுள்ள காதலில் வசித்து வருவது யார் ?” நீ சொல்வாய் : “நான் அறிவேன். அதனில் நான் மட்டு மில்லை. மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன் பற்றி யுள்ளன என்னை ?” நான் உரைத்தேன் : உனது பிரதி பலிப்புகள் அவை எல்லாம் ! ஒருவரை ஒருவர் […]