பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

This entry is part 29 of 33 in the series 27 மே 2012

(கட்டுரை : 80) (Newfound Exoplanet may turn to dust) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     உப்பி விரியும் பிரபஞ்சத்தில் புதிய பூமியைத் தேடுது கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி ஒளிக்கருவி விண்மீன் ஒளிமுன்னே அண்டக் கோள் ஒளிநகர்ச்சி பதிவாக்கிப் புதிய கோள் கண்டுபிடிக்கும் ! விண்மீன் பரிதி போல் தன்னொளி வீசும் ஒளிமந்தை மீன்களைச் சுற்றும் உலகங்கள் கோடி ! ஈர்ப்பு விண்வெளியில் பூமியைப் போல் நீர்க்கோள் […]

2025 ஆண்டுக்குள் முரண்கோள் (Asteroid) ஒன்றில் மனிதத் தளவுளவி இறங்கி ஆராய நாசா விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

This entry is part 27 of 29 in the series 20 மே 2012

  (NASA Trains Astronauts to Land on Asteroid before 2025) (கட்டுரை -3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.

This entry is part 20 of 41 in the series 13 மே 2012

(கட்டுரை: 79) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கல்தோன்றி மண் வளமான போது புல்தோன்றிப் பூ மலர புழுக்கள் நெளிய நீர்வளம் எழுந்த தெப்படி ? நானூறு கோடி ஆண்டுக்கு முன் தானாக நீர் வெள்ளம் மீன்வளம்  பெருக்கிய தெப்படி ? வெப்பத்தில் அழுத்த வாயுக்கள் வெடித் தெரிந்து நீர்த் திரவம் சேர்ந்ததா ? சூரியக் கதிரொளி மின்னலில் வாயுக்கள் சேர்ந்தனவா ? வால்மீன் மோதி நீர் வெள்ளம் வாரி இறைத்ததா ? விண்கற்கள் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை

This entry is part 32 of 40 in the series 6 மே 2012

  (கட்டுரை: 78) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கதிர்க் கருவிக்குப் புலப்படும் ! காலவெளிக் கருங்கடலில் பாலம் கட்டுபவை கோலம் வரையா தவை கருந்துளைகள் ! கதிர்கள் வீசுபவை பிரபஞ்சக் கலைச் சிற்பியின் களிமண் களஞ்சியம் ! கருந்துளைக் குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு புதிய பிரபஞ்சம் ! ஒளி உறிஞ்சும் உடும்புகள் ! விண்மீன் விழுங்கிகள் ! காலாக்ஸி நெய்யலாம் ! பிரபஞ்சத்தை வயிற்றில் சுமக்கும் ஒரு பூதக் […]

அக்கினி புத்திரி

This entry is part 22 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  அக்கினி புத்திரி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.” டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & […]

இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை

This entry is part 44 of 44 in the series 22 ஏப்ரல் 2012

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அக்கினி -5 தாக்கு கணையை வெற்றிகரமாக ஏவி நாங்கள் ஒரு வரலாற்று மைல் கல் நட்டதாக நான் அறிவிக்கிறேன்.  அதனால் நமது தேசம் தாக்கு கணைப் பொறி நுணுக்கத்தை கற்றுக் கொண்ட பெருமை அடைகிறது.    இப்போது இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணை ஏவும் வல்லமை  பெற்றுள்ளது.    அது அடைந்த உச்ச உயரம் 600 கி.மீ. (480 மைல்).  அதன் முக்கட்ட ராக்கெட்டுகள் திட்டமிட்டபடி இயங்கி குறிப்பிட்ட பளுவைத் […]

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11

This entry is part 24 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம். கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்? நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக […]

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

This entry is part 41 of 44 in the series 15 ஏப்ரல் 2012

இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !

This entry is part 27 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  (கட்டுரை: 71) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் தோரணங்கள் காணும் ! முன்பு சனிக் கோளின் வட துருவத்தில் தனித்துச் சுற்று கின்ற ஆறுகரச் சட்ட அலை வடிவம் கண்டது ! அது வாயு முகில் கோலமா ? பூதக்கோள் வியாழனில் செந்திலகம் போலொரு விந்தை முகில் குந்தி உள்ளது பல்லாண்டு காலமாய் ! நாசாவின் விண்ணோக்கி பரிதி மண்ட லத்திலே உருவில் […]

பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்

This entry is part 40 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் ! வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை ! வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீன்கள் பால் ஒளிவீசும் விந்தையாய் ! பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிபவை வால்மீன்கள் ! வையகத்தில் உயிரினம் வளர விதை யிட்டவை ! பரிதியை நெருங்கும் போது […]