author

பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி

This entry is part 6 of 38 in the series 20 நவம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றியாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது. இவ்வுதவியினை உபகாரம், தர்மம், என வடமொழியில் […]

பழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்

This entry is part 30 of 41 in the series 13 நவம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வடிவம், தோற்றம் கொடுப்பது உடல் ஆகும். இவ்வுடல் உயிர் தங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இவ்வுடலைக் கூடு என்றும் உயிரை அதில் தங்கும் பறவை என்றும், உடலை மெய் என்றும் உயிரை ஆவி என்றும் பலவகைகளில் கூறுவர். உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. ஒன்றற்கு ஒன்று ஆதாராமாக இவை விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஏதும் […]

பழமொழிப் பதிகம்

This entry is part 27 of 53 in the series 6 நவம்பர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயே மக்களிடையே வழங்கப்பட்ட பல்வேறு விதமான நாட்டுப்புறக் கூறுகள் இலக்கிய வடிவம் பெற்றன. மக்களின் விளையாட்டுக்கள், புதிர்கள், பழமொழிகள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவாரம் பாடிய மூவரில் நீண்ட காலம் வாழ்ந்த பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசர். இந்நாவுக்கரின் இயற்பெயர் மருணீக்கியார் என்பதாகும். இவரை, உழவாரப் படையாளி, தாண்டக […]

தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்

This entry is part 20 of 44 in the series 30 அக்டோபர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் விளையாட்டானது தமிழக மக்களின் வாழ்க்கையோடும், பண்பாட்டோடும் இணைந்ததாக விளங்குகின்றது. பழந்தமிழர்களிடையே காணப்பட்ட மகளிர் விளையாட்டுக்கள் குறித்த செய்திகள் பல தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்களின் வகைகள் விளையாட்டை பால்(sex) அடிப்படையில் பாகுபடுத்தலாம். அவையாவன, 1. […]

இலக்கியங்களும் பழமொழிகளும்

This entry is part 20 of 45 in the series 2 அக்டோபர் 2011

நம்முன்னோர்கள் பன்னெடுங் காலமாகத் தங்களின் வாழ்க்கையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்தவற்றை எல்லாம் ஒருங்குகூட்டி அவற்றைப் பின்வரும் தலைமுறையினருக்குப் புகட்ட வேண்டி பழமொழிகளாக ஆக்கி வைத்தனர். இப்பழமொழிகள் அனைத்தும் வாழ்வியல் உண்மைகளாகத் திகழ்கின்றன. இவை மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் பேரிலக்கியங்களாகத் திகழ்கின்றன. இதனை, ‘‘கலை நுட்பம் கொண்ட பேரிலக்கியங்களைப் பழமொழிகளின் விரிவாக்கங்களாகக் [provermbs writ large]கருதலாம் என்றும், பழமொழிகள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்துணை செய்யும் கருவிகள் ஆகும்’’ என்பர் அறிஞர் கென்னத் பர்க். ஒரு சமுதாயக் கட்டமைப்பில் சிலவகைச் சூழல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் போது மக்கள் அவற்றை அடையாளம்கண்டு அவற்றிற்கு உரிய பெயர் அளித்து அவற்றைக் கையாளுவதற்கான உத்திகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள் என அறிஞர் கென்னத் பர்க் (Kenneth Burke) தமது ‘வாழத்துணை செய்யும் கருவியாக இலக்கியம்’ [Literature as Equipment for Living, p., 944 ] எனும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். கென்னத் […]

பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்

This entry is part 12 of 41 in the series 25 செப்டம்பர் 2011

காலச்சூழல்களே கவிஞர்களை உருவாக்குகின்றன. அவ்வாறு காலத்தால் உருவாக்கப்பட்ட கவிஞரே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார் ஆவார். தம் காலத்தில் வாழ்ந்த பாவேந்தரைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்டு பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞராகப் பட்டுக்கோட்டையார் திகழ்ந்தார். பாவேந்தரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டாலும் தாம் செல்லும் பாதையை தாமே தெரிந்தெடுத்து அதன் வழியே இறுதிவரைப் பிறழாது வாழ்ந்தவர் மக்கள் கவிஞர் ஆவார். பட்டுக்கோட்டையில் மிக எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே துன்பங்களால் சூழப்பட்டவர் மக்கள் கவிஞர். […]

தமிழ் வளர்த்த செம்மலர்

This entry is part 32 of 37 in the series 18 செப்டம்பர் 2011

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். […]

காரும் களமும்

This entry is part 44 of 54 in the series 4 செப்டம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டைத் தமிழரின் இலக்கியங்களை மூன்று பெரும் பரிவுகளாகப் பகுப்பர். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். அவற்றில் பதினெண் கீழ்க்கணக்குத் தோன்றிய காலத்தைச் சங்கம் மருவிய காலம் என மொழிவர். இவ்விலக்கியங்கள் நீதி இலக்கியங்கள், அற இலக்கியங்கள் என வாழங்கப்பெறுகின்றன. சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடு பொருளாக விளங்கியது. அதனை அடியொற்றி வந்த சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் இத்தகைய […]

பழமொழிகளில் வரவும் செலவும்

This entry is part 39 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

திட்டமிட்டு வாழும் வாழ்க்கை என்றும் தெவிட்டாத இன்பத்தைத் தரும். திட்டமிடாது வா்வது பல்வேறு முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும். வாழ்க்கை முன்னேற்றப்பாதையில் செல்ல திட்டமிடல் என்பது முக்கியப் பஙக்கு வகிக்கின்றது. இல்லறம் நல்லறமாக அமைய வரவு செலவு என்பது திட்டமிட்டு அமைதல் வேண்டும். நமது முன்னோர்கள்இல்லறம் சிறக்க வரவு செலவு குறித்த செய்திகளைப்பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். அவை என்றும் திட்டமிட்ட வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன. வரவிற்கேற்ற செலவு வருமானத்திற்குள் தகுந்தவாறு செலவுகள் செய்தல் வேண்டும். அளவுக்கு அதிகமாகச் செலவு […]

பழமொழிகளில் மனம்

This entry is part 34 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். மனம்-வாழ்வு வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், […]