ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா ரகத் துணிகளை நெய்த இதர நெசவாளிகள் பணத்தில் புரளுவதையும் அவன் கண்டான். தன் மனைவியிடம், ‘’அன்பே அவர்களைப் பார்! அவர்கள் மோட்டா ரகத் துணிதான் நெய்கிறார்கள். என்றாலும் பணத்தைக் குவித்தவாறு இருக்கிறார்கள். இந்த ஊர் […]
ஒரு ஊரில் சாகரதத்தன் என்றாரு வியாபாரி இருந்தான். அவனுடைய மகன் ஒருசமயம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். அதில் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று ஒரு வாக்கியம் காணப்பட்டது. அதை சாகரதத்தான் பார்த்துவிட்டு, ‘’மகனே, இந்தப் புத்தகத்தை என்ன விலைக்கு வாங்கினாய்?’’ என்று மகனைக் கேட்டான். ‘’நூறு ரூபாய் தந்தேன்’’ என்றான் மகன். ‘’சீ, மடையா! இந்த ஒரு அடிச்செய்யுள் மட்டுமே உள்ள இந்தப் புத்தகத்துக்கா நூறு ரூபாய் கொடுத்தாய்? […]
அது துரதிர்ஷ்டத்துக்குக் கட்டிய கோயில்; அது மனத்தைப் பறிக்கும் திருடன்; கண்ணீருக்குப் புகலிடமாயும், மானத்துக்குச் சாவு மாதிரியும், வாய்த்திருப்பது; அது பிறரின் ஏளனத்துக்கு இருப்பிடம்; அது பயத்தின் களஞ்சியம்; சந்தேகத்தின் விளைநிலம்; ஆபத்தின் உறைவிடம்; மானமுள்ளவர்களின் தேசுவைப் பறிக்கும் காலன்; அது ஒரு வகைச் சாவு. தன்மானமுள்ளவனுக்குப் பிச்சையெடுப்பது என்பது ஒரு நரகமே தவிர வேறில்லை. பிச்சைக்காரன் மானமழிகிறான். மானம் போனதால் கர்வத்தை விடுகிறான். கர்வம் போனதால் சிறுமையடைகிறான். சிறுமை யடைவதால் வேதனைப்படுகிறான். வேதனைப்படுவதால் துயரம் அடைகிறான். […]
ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, பின்வரும் செய்யுளைச் சொன்னான். எனது வில்லையும் அதில் தொடுத்துள்ள அம்பையும் கண்டபிறகும் அது பயமில்லாமல் என்னை நெருங்குகிறது. நிச்சயமாக அதை யமன் என்னருகில் அனுப்பி வைத்திருக்கிறான் […]
அது மழைக்காலம். ஏதோ ஒரு ஊரில் ஒரு சமயம் ஒரு பிராமணனிடம் நான் தங்குவதற்கு இடம் கேட்டேன். அவனும் கொடுத்தான். அங்கே எனது அறச்செய்கைகளில் ஈடுபட்டவாறு நான் காலம் கழித்து வந்தேன். ஒருநாள் விடியற்காலையில் நான் விழித்துக்கொண்டேன். பிராமணனும் அவன் மனைவியும் தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டவாறு இருந்தேன். பிராமணன் சொன்னான்: ‘’அன்பே, நாளைக் காலையில் தட்சிணாயன சங்கராந்தி வருகிறது. மிகவும் லாபகரமானதாக இருக்கும். எனவே வேறொரு கிராமத்துக்குப் போய் நான் வீட்டுக்கு […]
ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் […]
இந்தச் சொற்களைக் கேட்டதும், ஹிரண்யன் வெளியே ஓடி வந்தது. இரண்டும் அன்புடன் பேசிப் பழகின. சிறிது நேரமானவுடன் லகுபதனகன், ‘’நீ வலைக்குள் போய்விடு. நான் போய் இரை தேடிக்கொண்டு வருகிறேன்’’ என்று ஹிரண்யனிடம் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றது. ஏதோ ஒரு காட்டுக்குப் பறந்து போயிற்று. அங்ளே ஒரு புலி கொன்று போட்டிருந்த காட்டெருமையைக் கண்டது. வயிறு நிறைய அதைத் தின்ற பிறகு, செம்பரத்தைப்பூபோல செக்கச் செவேலென்றிருக்கும் மாமிசத் துண்டம் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பிந்து, ‘’ஹிரண்யனே; […]
ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் அதன் ஒரு கழுத்துக்கு அமிர்தம் கிடைத்தது. அப்போது அதைப்பார்த்து ‘’அதில் எனக்குப் பாதி கொடு’’ என்று இரண்டாவது கழுத்து கேட்டுக்கொண்டது. முதல் கழுத்து மறுத்துவிடவே இரண்டாவது கழுத்துக்குக் கோபம் வந்துவிட்டது. எங்கோ விஷத்தைத் தேடிப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. இரண்டுக்கும் வயிறு […]
நட்பு அடைதல் இங்கே நட்பு அடைதல் என்னும் இரண்டாம் தந்திரம் தொடங்குகிறது. அதன் முதன் செய்யுள் பின்வருமாறு: சாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும் – காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் – எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர். ‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்கவே, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்: தென்னாட்டில் பிரமதாரூப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்திலேயே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் அடி மரம் பெருத்தும், கிளைகள் […]
முட்டாள் நண்பன் ‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்ற எண்ணினான். வியாபாரியின் மகனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். இரண்டு மடங்காகச் சம்பளம் கொடுத்து பொறுக்கியெடுத்த நேர்த்தியான யானை, குதிரை, காலாட் படைகளைத் திரட்டினான். ராஜநீதியின் ஆறு அம்சங்களும் அறிந்த அந்த […]