author

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6

This entry is part 14 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -6 சீதாலட்சுமி   பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு   சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். . உன் பொம்மையைப் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 5

This entry is part 42 of 42 in the series 25 மார்ச் 2012

1967 ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் திருப்பம். சீதாலட்சுமி செலவத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. காங்கிரஸ்கட்சி அரியாசனத்திலிருந்து கீழிறக்கப்பட்டு திராவிடக் கட்சியை அமர்த்திய ஆண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானார். அவரிடம் நீதி கேட்டுப் போராடவேண்டிய சூழலில் நான் தள்ளப்பட்டேன். அண்ணாவின் கருணையால் போராட்டம் வென்றது. இது எங்கும் பதியப்படாத ஓர் செய்தி. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பதிய வேண்டிய கடமை எனக்குண்டு. அது என்ன என்று சொல்லும் முன் பல […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்

This entry is part 16 of 36 in the series 18 மார்ச் 2012

என்னை தனக்குள் அழுத்திவிடும் வல்லமை படைத்தது நீலமலை. துரைராஜ் பற்றி சொல்ல வேண்டு மென்றால் நீலமலைக்கு நான் செல்ல வேண்டும். என் பயணம் திசைமாறிப் போக நேரிடும். பெரியகருப்பனுடன் என் மனத்தில் உறையும் துரைராஜ் பற்றி பின்னர் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது என் பணிக்களம் செல்லலாம். சில இடங்களில் ஊர்ப் பெயர்கள், சம்பந்தப்பட்ட மனிதர்களின் பெயர்கள் கூறுவதைத் தவிர்த்திருக்கின்றேன். . சில நிகழ்வுகள் கூட உண்மைகளின் ஆழத்தை மட்டும் காட்டும். நமக்கு வேண்டியது செய்திகள் மட்டுமே. முதல் […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3

This entry is part 26 of 35 in the series 11 மார்ச் 2012

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். கற்பனைக் காட்சிகளில் தோய்ந்த மனத்தைத் திருப்ப என்னிடமிருக்கும் சேமிப்புக் குவியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சில புகைப் படங்கள் கீழே விழுந்தன. அவைகளைக் கையிலெடுக்கவும் முதல் புகைப்படமே என்னை மீண்டும் நினைவுக் குழியில் தள்ளிவிட்டது. கலைவாணர் அரங்கில் செங்கை மாவட்ட மகளிர் மாநாடு நடந்தது. அந்த நிறைவு விழாப் புகைப் படங்களில் ஒன்றுதான் அது. முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். சமூக நலத்துறை […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2

This entry is part 8 of 45 in the series 4 மார்ச் 2012

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்ப்பொருள் காண்பது அறிவு. .._ நீச்சல்குளம் அருகில் சென்றவள் உட்கார விரும்பவில்லை. சிறிது தூரமாவது நடக்க எண்ணினேன். நீச்சல் குளக் கூடாரத்தின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றேன். பெரிய காடுபோல் உயர்ந்து வளர்ந்த மரங்கள் ! பச்சைக் கம்பளமாய்ப் புல்வெளி!. செம்பருத்திச் செடிகள் . அதன் பக்கத்திலேயே மல்லிகைப் பந்தல்! மல்லிகையின் மணம் மயக்கியது. இயற்கையின் எழில் எங்கும் கொட்டிக் கிடந்த்து. நடந்தது போதுமென குளத்திற்குத் திரும்பி ஓர் நாற்காலியில் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1

This entry is part 18 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சீதாலட்சுமி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ..- வாழ்வியலின் வழிகாட்டி —————————————————- எட்டயபுரத்தில் பெருமாள் கோயிலுக்கருகிலுள்ள தெருவில் ஓர் சிறிய வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருவர் நின்று கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். காலைப் பொழுது. கிணற்றை யொட்டி ஓர் முருங்கை மரம், தள்ளி ஓர் வேப்பமரம், சில காட்டுச் செடிகள். சுற்றி வந்த கண்களுக்கு அக்காட்சி நிறைவைக் கொடுக்கவில்லை. வானத்தைப் பார்த்தார். காணி நிலம் வேண்டும். பத்து பதினைந்து தென்னை மரங்களாவது […]