நுடக்குரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில் பெண்மணி ஒருவர் பேராவலில் இருந்தார்   தடுப்புச்சுவரொன்று தடுத்துக்கொண்டிருந்தது   தடுப்புச்சுவரிருந்தும் இதயத்துடிப்பு கூடியது   பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பது பட்டெனப் புரிந்தது   இருக்கையைவிட்டு எழுந்தபெண்மணி சாலையைநோக்கி விழிகளை வீசித்தவிப்பது தெரிந்தது   […]

பசலை பூத்தே…

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும். நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும் ஓதையுண்பினும் ஓவா உறுபசி உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும். நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர் தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே. பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும் துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா. துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும் […]

அவருக்கென்று ஒரு மனம்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க அய்யா” “ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்” “எங்க இருக்கிறீங்க?” “ஒங்க பகுதியிலதான் ஆர்கேவி தட்டச்சுப் பயிலகத்துக்கிட்ட நிக்கிறேன்.” “அங்கேயே நில்லுங்க. நான் வரேன்” “முகவரிய சொல்லுங்க. நான் வந்துடுறேன்” “இல்லல்ல.. இந்த இரவு நேரத்துல என்வீட்ட கண்டுபிடிக்கிறது கஷ்டம். நானே வரேன்” அய்ந்து நிமிடங்களில் அந்த இடத்துக்குச் சென்றேன். வட்டமான முகத்தில் முறுக்கிவிட்ட அடர்த்தியான […]

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    1. கருணை   பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்   அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க ஒரு குழந்தையும் இல்லை அதன் வரவால் களிப்பவர்களும் யாருமில்லை அடர்ந்த குகைபோல மூடிக் கிடக்கிறது அந்த வீடு   ஏற்றுக்கொள்ள யாருமற்ற நிலையிலும் வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்   2. ஒரு பகுதிக் கனவு   எல்லாமே மறந்துபோக நினைவில் தங்கியிருப்பது […]

வாழ்க்கை ஒரு வானவில் – 18

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பிய ராமரத்தினம், “இன்னைக்கு ரெண்டு மணி நேரம் லேட்டாஆஃபீசுக்குக் கிளம்புவேன்மா….” என்று பருவதத்திடம் தெரிவித்தான். அவனிடம்காப்பியைக் கொடுத்துவிட்டு, “ரமணி டூர்லேருந்து வந்துட்டானா?” என்று பருவதம்விசாரித்தாள். “இன்னும்இல்லேம்மா. இன்னைக்கு விசாரிக்கிறேன் – எப்ப வருவான்னு. நேத்தே வந்திருக்கணும்.” “அவன்கிட்டமாலாவைப் பத்திப் பேசப் போறேதானே?” “ஆமா, ஆமா, ஆமா. அதான் சொன்னேனே அன்னைக்கே?” “ஏண்டாப்பாஉனக்கு இவ்வளவு கோவம் வருது? உனக்கு வேலை ஜாஸ்தி… அதான்…” அவன்ஒன்றும் சொல்லாமல் காப்பியைக் குடித்தான். …. அன்று தன் […]

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   கவலை   பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் பப்பாளி மரத்திலிருந்து அரைப் பழமாக இருக்கும்போதே பறித்துக் கொறித்துப் போடுகிறது. எனக்கிரண்டு பழம் வாய்த்தால் அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது.   நகரத்து அணில், பகலிலும் தைரியமாக வருகிறது. என் கம்பும் கூச்சலும் பொருட்டில்லை. என் வருகை கண்டால் நிதானமாக இறங்கி, மதிலிடுக்கில் ஓடி அடுத்த வீட்டுக் காம்பவுண்டில் அடைக்கலம்.   இப்போது இரண்டு பழங்கள் […]

கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வெள்ளி 2000ம் மற்றும் சான்றிதழுடன் வெற்றியாளரை கெளவரவப்படுத்தும் இந்நிகழ்வில், […]

தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம் பெண்கள். குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள். பிள்ளையார் ஒவ்வொரு வீட்டு வாசலுக்காய் வந்து சுண்டலும் கொழுக்கட்டையும், பூசையும் ஏற்று விநாயகர் தான் கொலுவேற்கும் இருப்பிடத்தில் போய் அமர்ந்துக்கொண்டார்.     சிறிய குழந்தை ஒன்று விநாயகர் அகவல் படித்தது மைக்கில். பிறகு குழந்தைகள் பாடல்கள் வேறு பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த […]

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின்  20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக  உறுப்பினரும்  இலக்கியஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர் இளையபத்மநாதன் – எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் – டொக்டர்  நடேசன் – திரு. ஜெயராமசர்மா -சமூகப்பணியாளர்கள் திருவாளர்கள்   இராஜரட்ணம் சிவநாதன் – நவரத்தினம்    இளங்கோ – டொக்டர்    சந்திரானந்த் – ஜனாப்  ரஃபீக்முருகபூபதியுடன்    வீரகேசரி நிறுவனத்தில்    முன்னர்    பணியாற்றியதிரு. சுப்பிரமணியம்    தில்லைநாதன் […]

அலைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதித்தெரிந்தன. அவன் மாநாட்டிற்கு திருமுதுகுன்றத்திலிருந்து வந்தான். திருமுதுகுன்றம் கடலூர் மாவட்டத்து ஒரு தாலுக்காவின் தலை நகரம்.கடலூர் மாவட்டத்துத்தோழர்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருக்கலாம். மொத்தமாகத் தமிழகத்துத்தோழர்கள் எல்லோருமாக ஐயாயிரம் பேருக்குக் கடலூரில் கூடியிருந்தார்கள். […]