எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா…., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். “அதான் சார். … போனமாசம் இதே இடத்தில் நான் வாந்தி எடுத்த போது ஓடோடிச்சென்று , கோலி சோடா வாங்கி கொடுத்திங்களே. ..” ஏதோ ஒரு இடத்தில் சிந்திய புன்னகை இன்னொரு இடத்தில் விருட்சம். யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். அன்பே போதிமரம்.
வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு கதைக்குமுடிச்சுப் போட்டுத் தாவுவார்.இப்பொழுதுஊரின் கிழக்கேதனியாய்ப் படுத்துக் கொண்டுயாருக்குக் கதை சொல்கிறாரோ?
விடாது துரத்துகின்றவைகளுக்காகவும் விட்டு விட முடியாதவைகளுக்காகவும் ஓடுமென் அன்றாடத்தின் இடையில் உரசிவிடும் இவரை விட்டொழித்துவிடலாம்தான் வெறுப்பின் வேதனையில். மறந்துபோன என்னை நினைவூட்டுவதன் பொருட்டால் யாவின் அசௌகரியங்களையும் பொறுக்கத்தான் வேண்டியதாகிறது இவரைப் போல ஒருவரை இக்கணம் வரை என் வாழ்வில் சந்திக்க இயலாதிருப்பதால். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார். 1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர். 1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய […]