கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3

This entry is part 42 of 42 in the series 1 ஜனவரி 2012

மூளைக்குள் கடவுள் இது பிபிஸி ஆவணப்படம். இதற்கான தமிழ் சப்டைட்டில்கள் நான் எழுதியவை. இரண்டாம் பகுதி குரல்: பரிசோதனை நடப்பதற்கு முன்னால், டாக்டர் பெர்ஷிங்கர் நபர்களை ஒரு அமைதியான அறைக்கு அழைத்துச்சென்று அவர்களது கண்களை மூடி கட்டிவிட்டார். டான் ஹில் அவர்களுக்கு எதற்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கூட தெரியாது. டான் ஹில்: ஹெல்மட் வைத்ததும், பல வினோதமான அனுபவங்களை பெற்றேன். என்னுடைய கைகள் இறுக்கிகொண்டன. விவரிக்க முடியாத பய அலைகள் தோன்றின. கூச்செரியும் உணர்வுகள். […]

அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்

This entry is part 41 of 42 in the series 1 ஜனவரி 2012

நா . தில்லை கோவிந்தன்} விவசாயி    “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம்   கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல . […]

பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்

This entry is part 40 of 42 in the series 1 ஜனவரி 2012

பாம்பை மணந்த பெண்   ராஜக்கிருஹம் என்கிற ஊரில் தேவசர்மா என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அண்டை அயலார்களின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அவள் ரொம்பவும் அழுதாள். ஒருநாள் பிராமணன் அவளைப் பார்த்து, ‘’அன்பே, கவலைவிடு. நான் குழந்தைப் பேறு பெறுவதற்காக யாகம் செய்யும்போது ஏதோ ஒரு அசரீரி, ‘பிராமணனே, மற்றெல்லா மனிதர்களைக் காட்டிலும் மிகுந்த அழகும், குணமும், பலமும் உள்ள குழந்தை உனக்குப் பிறக்கும்’ என்று தெளிவாகச் சொல்லிற்று’’ என்றான்.   […]

முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்

This entry is part 39 of 42 in the series 1 ஜனவரி 2012

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் நான் போய்வந்தேன். ஆகாவென்றிருந்தது. மீண்டும் போனேன் அங்கே. இலையுதிர்காலம் கடந்தது. புனித லூக் மருத்துவப் பள்ளியில் குளிர்கால வகுப்புகள் துவங்க, நான் லண்டன் திரும்பிவந்தேன்… இப்போதெல்லாம் சனிக்கு சனி நான் அங்கே ஆஜர். அதுதான் எனது கலை மற்றும் எழுத்து உலகத்தின் சாளரம். நான் அறையில் ரொம்ப மும்முரமாய் எழுதிக் குவித்தேன், ஆனால் சனி மதியங்களில் யாரிடமும் அதைப்பற்றி மூச்சு காட்டவில்லை. இந்தக் காலகட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிற பிற எழுத்தாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஒரு […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

This entry is part 38 of 42 in the series 1 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 52 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52 இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.   अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ) மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும்   சொற்கள்   मातुलः – मातुः भ्राता mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி)   मातुलानी – मातुलस्य पत्नी mātulānī – mātulasya patnī (மாமாவின் மனைவி)   […]

ஜென் ஒரு புரிதல் – 25

This entry is part 37 of 42 in the series 1 ஜனவரி 2012

சத்யானந்தன் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதைகள் இவை. கடைசியில் உள்ள கவிதை எந்த மதத் துறவியும் எழுதாதது. ஜென் சிந்தனையைத் தெளிவாக்குவது. தலையணைக்குப் பதில் முழங்கை மங்கிய நிலவொளியில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது —————————————- இன்னும் இருள் முழுவதுமாகக் கவியவில்லை காலியான நிலங்களின் மேல் நட்சத்திரங்கள் மின்னுகின்றன —————————————- பழைய கிணறு ஒரு மீன் தாவும் இருட்டுச் சத்தம் —————————————- நிலத்தை உழுகையில் ஒரு பறவையும் பாடவில்லை மலையின் நிழலில் —————————————- தவிட்டுக் குருவி […]

சிந்தனைச் சிற்பி

This entry is part 36 of 42 in the series 1 ஜனவரி 2012

மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள். “ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!” யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள்.  அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)

This entry is part 35 of 42 in the series 1 ஜனவரி 2012

  மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ மலைகளோடு சேர்ந்து ஏறுகிறாய். பள்ளத் தாக்குகளோடு இணைந்து இறங்குகிறாய், பசுமைத் தளம் மீது பரவுகிறாய். ஏறும் போது நடக்க உனக்கு வலுவும், இறங்கும் போது உனக்குப் பரிவும் உள்ளது. உன் நடையில் ஒரு நளினம் தெரிகிறது. நசுக்கப் பட்டவர் மீது கருணை காட்டுவதாலும், கர்வம் பிடித்து மூர்க்க வலுப் பெற்றவரிடம் கடுமையாய் நடப்பதாலும் நீ அருள் கூர்ந்த வேந்தனைப் போன்றவன்,” […]

கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை

This entry is part 34 of 42 in the series 1 ஜனவரி 2012

காரைக்குடி கம்பன் கழகத்தில் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை சார்பில் வ்ரும் 7.1.2012 ஆம் நாளில் மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இவ்வுரை வரும் 3-3-2012 அன்று நடைபெறவுள்ள கம்பன் விழாவில் நூல்வடிவாக வெளியிடப் பெறஉள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது. இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திருமதி கா. மணிமேகலைஅவர்கள் தலைமையேற்க உள்ளார். வரவேற்புரையாற்ற திரு. கம்பன் அடிசூடி அவர்களும் […]

நீயும் நானும் தனிமையில் !

This entry is part 33 of 42 in the series 1 ஜனவரி 2012

நீயும் நானும் தனிமையில் ! மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. வேனிற் கால நாட்கள் விரைந்து ஓடின வெண்ணிலவை நோக்கிச் சுடு ! ஆயினும் குறி தவறிப் போகும் முற்றிலும் ! இருண்ட வாழ்வே எதிர்ப் படும் இப்போ துனக்கு ! ஒரு காலத்தில் உன் கரம் பறித்த பூக்களின் நறுமணம் பரவிய காலி அறை கண்ணில் படும் உனக்கு ! காரணம் நீ அறிவாய் தனிமையில் […]