அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா

This entry is part 1 of 12 in the series 3 மார்ச் 2018

இடம் : மெட்ராபோல் ஹோட்டல் நாள் : மார்ச் 10 சனிக்கிழமை மாலை 5:30 நிகழ்ச்சி நிரல் : 5:15 – தேனீர் வரவேற்புரை : கோபால் ராஜாராம் முதல் அமர்வு : ராஜ் கௌதமன் விருது வழங்கும் நிகழ்வு உரைகள் : முனைவர் முத்து மோகன் வ. கீதா ஸ்டாலின் ராஜாங்கம் 15 நிமிட இடைவேளை இரண்டாவது அமர்வு : சமயவேல் விருது வழங்கும் விழா உரைகள்: சா தேவதாஸ் ச தமிழ்ச்செல்வன் எஸ் ராமகிருஷ்ணன் […]

30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”

This entry is part 2 of 12 in the series 3 மார்ச் 2018

”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்” ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இதுதான் இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது. ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் கேட்கிறான். […]

எங்கள் பாரத தேசம்

This entry is part 3 of 12 in the series 3 மார்ச் 2018

சி. ஜெயபாரதன், கனடா ஒன்று எங்கள் தேசமே ஒருமைப் பாடெமது மோகமே உதவி செய்தல் வேதமே உண்மை தேடலெம் தாகமே கண்ணியம் எமது பண்பியல் கடமை எமது உடைமையே இமயம் முதல் குமரிவரை எமது பாதம் பதியுமே. தென்னகத்தின் முப்புறமும் வண்ணப் பெரும் கடல்களே. வடக்கில் நீண்ட மதிலரணாய் வானுயர் இமய மலைகளே. புத்தர், சித்தர், காந்தியை பெற்றுயரும் பூர்வ நாடிது. ஓங்கி குமரி​ வள்ளுவச் சிலை ​உலகுக்கு​ அறநெறி காட்டுதே. எந்தையும் தாயும் பலயுகம் இனிதாய் […]

மௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்பு

This entry is part 4 of 12 in the series 3 மார்ச் 2018

சுயாந்தன். === மௌனியின் படைப்புலகம் பற்றிய மதிப்பீடுகளைப் பலர் முன்வைத்துள்ளனர். பலர் மிகையாகவும் ஒருசிலர் நியாயமாகவும். இதில் புதுமைப்பித்தன், பிரமிள், சு.வேணுகோபால் வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், ஜெயமோகன், ரமேஷ் பிரேம், முதலியவர்களின் மதிப்பீடுகள் முக்கியமானவை. முதல் மூவரும் மௌனியின் படைப்புலகினைப் பாராட்டியதுடன் சில அடைமொழிகளாலும் அவருக்கு முக்கியத்துவம் காட்டினர். மௌனி பற்றிய பின்வந்த நால்வரது கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஒரு நியாயப்பாட்டிலிருந்து கூறியவை. மௌனி நிராகரிக்க முடியாத எழுத்தாளர் ஆனால் திருமூலர் போன்ற அடைமொழிகள் மிகையானவை என்பது […]

விண் தொட வா பெண்ணே!

This entry is part 5 of 12 in the series 3 மார்ச் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி மாலையிட்டது ஒருவனுக்குதான் மனைவியானதோ ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி. அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு இராமன் தந்தது அக்கினிப்பிரவேசம். அதுவும் போதாதென்று நிறைமாதம் சுமந்தவளை வனம் போகச் சொன்னான். பொறுத்தது போதுமென்றுதான் அவன் முகம் பாராது பூமி பிளந்து புதைகிறாள் சீதை. பெண்ணே ஆணையிட்டு வழிகாட்டும் தலைவியாம், ஆதியில் தாய்வழிச் சமூகத்தில். புகழில் நாம் மயங்கியதால் போகப்பொருளாய் மாறிப் போனோம் பின்னாளில். அரசனின் அந்தப்புறத்தில் கொலுபொம்மைகள் அவன் இறந்தால் உடன்கட்டை. கருவறை வாசல் திறந்தது, காத்திருந்தது கள்ளிப்பால் […]

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

This entry is part 6 of 12 in the series 3 மார்ச் 2018

  என்ரிக்கோ ஃபெர்மி (1901-1954) ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.      http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iwt86y0981M http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Yp4jUer3A4A http://www.biography.com/people/enrico-fermi-9293405/videos http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TJ9P1aWl0yE ++++++++++++ அணுவைப் பிளந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் 1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான்  கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற,  அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு  […]

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

This entry is part 7 of 12 in the series 3 மார்ச் 2018

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4   Gorbachev and Reagan   பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு போன வல்லரசுகள் பின் […]

தலைச் சுற்றல் ( VERTIGO )

This entry is part 8 of 12 in the series 3 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் ” வெர்ட்டைகோ ” என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில் நாம் சுற்றுவதான உணர்வு. இரண்டாவது நம்மைச் சுற்றியுள்ளவை சுற்றுவது போன்ற உணர்வு. தலைச் சுற்றல் பொதுவாக காதில் பிரச்னை இருந்தால் ஏற்படும். பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு ஏற்ப நேராக நிற்பதற்கும், கீழே விழுந்துவிடாமல் நடப்பதற்கும் […]

வழக்கு

This entry is part 9 of 12 in the series 3 மார்ச் 2018

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று எதுவுமே இல்லையென்றால்….. படங்களைக் காட்டினால் ‘க்ராஃபிக்ஸ்’ என்றார். ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின் ’கிரியேட்டிவிட்டி’ என்றார். குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால் ’கவியின் மெய் பொய்தானே’ என்று கண்ணடித்தார். நானே பார்த்திருக்கிறேன் என்றேன். […]

இங்கும், அங்கும், எங்கும் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 10 of 12 in the series 3 மார்ச் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நல்வாழ்வு நீடித்து நடத்தி வர என் காதலி எனக்கிங்கு அவசியம் ! இங்குதான் தேவை ! ஆண்டு பூராவும், என் வாழ்க்கை நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது கூட்டுறவில் ! அதில்தான் ஓர் உன்னதம் உள்ளது, எவரும் மறுக்க இயலாது ! அவள் கூந்தலை எனது விரல்களால் நீவி விடுவது இருவருக்கும் பெரு மகிழ்ச்சி ஊட்டும் எவன் உரைத்தாலும் அவன் இருப்பது தெரியாது. என்னிச்சை எல்லா இடங்களிலும் […]