வால்மீன் வால்களைப் பற்றிப் புதிய தகவலை நாசாவின் சூரிய அரங்கு விண்ணுளவி தருகிறது

This entry is part 2 of 6 in the series 11 நவம்பர் 2018

Comet McNaught over the Pacific Ocean. Image taken from Paranal Observatory in January 2007. Credits: ESO/Sebastian Deiries +++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   காலவெளிப் பிரபஞ்சத்தில் வால்மீனின் நீண்ட வால்கள் ஒளிவீசும் விந்தையாய் ! பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிபவை வால்மீன்கள் ! வையகத்தில் உயிரினம் வளர விதையிட்டவை ! பரிதியை நெருங்கும் போது வால்மீனின் நீண்ட ஒளிவால் நமது பூமியைத் தொடுமென நர்லிகர் […]

உதவி செய்ய வா !

This entry is part 3 of 6 in the series 11 நவம்பர் 2018

 மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா    வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய் இருந்த போது , எந்த முறையிலும் எவன் உதவியும் நாடிய தில்லை ! அந்த நாட்கள் போயின ! இப்போது, சுய மதிப்பில்லை எனக்கு ! என்னிதயம் மாறிப் போனதாய் இப்போ தெனக்குத் தெரியுது ! வீட்டுக் கதவை திறந்து வைத்தேன் ! முடிந்தால் எனக்குதவ வாரீர்  ! […]

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழா

This entry is part 4 of 6 in the series 11 நவம்பர் 2018

– அடையாறு காந்தி நகர் நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்றது – சென்னை. அக்.29. சென்னை அடையாறிலுள்ள காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் துவக்க விழாவும் ‘இதயத் தும்பி’ சிறுவர் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளர் தீபம் எஸ்..திருமலை தலைமையேற்றார்.கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்ரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய சிறுவர் […]

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018

This entry is part 5 of 6 in the series 11 நவம்பர் 2018

கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும் முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். […]

கேழல் பத்து

This entry is part 6 of 6 in the series 11 நவம்பர் 2018

கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். அது கோரைக் கிழங்கை விரும்பி உண்ணும். அக்கிழங்கை எடுப்பதற்காக நிலத்தைக் கிளறும். அந்த நிலமானது பயிரிடப் பண்படுத்தக் குறவர்களுக்கு மிகவும் எளிதாகும். இப்பகுதியின் பாடல்களில் ஒவ்வொன்றிலும் கேழலின் செயல்கள் கூறப்படுவதால் இப்பகுதி கேழல் பத்து என்னும் பெயர் பெற்றது. ===================================================================================== கேழல் பத்து—1 மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக்கொல்? அதுவே மன்ற வாரா மையே! [தறுகண்=அஞ்சாமை; வன்கல்=வலிய கற்கள்; அடுக்ககம்=பக்கமலை; […]

அதன் பேர் என்ன?

This entry is part 1 of 6 in the series 11 நவம்பர் 2018

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த அலகுகள்வைத்தும் அதன் எடையைச் சொல்லமுடியாதது! தராசில்வைத்து எடைபார்க்கமுடியாதது! இறைவனைப்போல வடிவமில்லாதது! காற்றில் கலந்திருக்கும் தூசாகவுமில்லை மாசாகவுமில்லை சுவாசக் காற்றாகவுமில்லை ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று காரணமாகிவிடுகிறது என் எடை கூடவில்லை எனினும் கனக்கிறதே! அறிந்தவர் கூறுங்கள் அது என்னவென்று? அதுவரை என்கவலை தொடரும்….. (9.11.2018 பிற்பகல் 2மணிக்கு அலுவலகத்தில்)