ஹிலா திருமணம் என்ற சாபம்

This entry is part 23 of 23 in the series 7 அக்டோபர் 2012

ஏ. ஹெச். ஜாபர் உல்லா The curse of Hila marriage By A. H. Jaffor Ullah ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், அதன் உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கையை நுணுகிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களது சமூக பழக்க வழக்கங்களை பார்க்க வேண்டும் என்று யாரோ ஒரு ஞானி சொன்னார். சமீப காலங்களில், கிராமப்புற பங்களாதேஷின் கிராமப்புறங்களில் நடக்கின்றவற்றை பார்த்தபின்னால், நமது சமூகத்தில் இருக்கும் தீய சமூகப்பழக்க வழக்கங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று வெட்கப்படுகிறேன். வெட்கத்தால் என் முகத்தை […]

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 22 of 23 in the series 7 அக்டோபர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் ஷகன்னிக் கவிதை| என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் […]

அம்மாவின் மோதிரம்

This entry is part 21 of 23 in the series 7 அக்டோபர் 2012

  அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது […]

யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்

This entry is part 20 of 23 in the series 7 அக்டோபர் 2012

  இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவின்மையைக் மிக நுட்பமாக சித்திரப்படுத்திக் காட்டுகிறது.   யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான் -ஆனால் ஆடுகள் மேயும் புற்களுக்கான நிலத்தடி நீரை குடித்துவிடுகின்றன. குளத்துக்குப் பக்கத்தில் பாறையில் கூட அவை செழித்து வளர்கின்றன -ஆனால் […]

அக்னிப்பிரவேசம் – 4

This entry is part 19 of 23 in the series 7 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோறும் பிகினிக் சென்றார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து மாணவிகளுடன் கம்பார்ட்மென்ட் கலகலப்பாய் இருந்தது. வயதானவர்கள் முதல் நேற்று மீசை முளைத்த விடலைகள் வரையில் அந்தப் பெட்டிதான் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. மாணவிகளும் சுதந்திரமாய் குறும்பு சேட்டைகள் செய்துகொண்டும், வம்பு பேசிக்கொண்டும், கண்ணில் பட்ட ஆண்பிள்ளைகளுக்கு பட்டப்பெயரை சூட்டிக் கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்தார்கள். பாவனாவின் பார்வை இரண்டு வரிசைகளைத் தாண்டி ஜன்னல் ஓரமாய் […]

விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே! திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்

This entry is part 18 of 23 in the series 7 அக்டோபர் 2012

திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்த்தில்லை; தொடக்கம் முதல் இன்று வரை திராவிட அரசியல்தான் இங்கு நடத்தப் படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் நூல் புத்தக விலை : ரூ. 135/-  பக்கம் 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம் லாயிட்ஸ் சாலை சென்னை 600 014 தொலை பேசி: +91-44-4200 9601 /03/04 பின் அட்டை வாசகங்கள் : திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. […]

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

This entry is part 17 of 23 in the series 7 அக்டோபர் 2012

  (World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரியுது ! கதிரலைகள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலவெளிக் கடலில் அசுரத் தீவுகளாய் மறைந்துள்ள பூதத் திமிங்கலங்கள் ! உறங்கும் கருந்துளை உடும்புகள் விண்மீன் விழுங்கிகள் ! பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும் மரணக் கல்லறைகள் ! பிரபஞ்சச் சிற்பியின் செங்கல் மண் சேமிக்கும் இருட் களஞ்சியம் […]

நம்பிக்கை ஒளி (2)

This entry is part 16 of 23 in the series 7 அக்டோபர் 2012

மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன […]

ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்

This entry is part 15 of 23 in the series 7 அக்டோபர் 2012

  அந்தக் காரின் முதுகில் மோதிய வேகத்தில் தன் இருசக்கர வாகனத்துடன் இரண்டு மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார் வசந்தன். தலைக் கவசத்தின் இடப்பக்கம் பழைய டயராய்த் தேய்ந்து விட்டது. அந்த ஒரு வினாடி வசந்தனின் உயிரின் விலை 90 வெள்ளிக்கு வாங்கிய அந்தத் தலைக் கவசம்தான். சாலை ஓரத்திற்கு தூக்கிவரப்பட்டார். முதலில் சில மூச்சுக்களைக் கடினமாக இழுத்தார். பிறகு சரளமானது. உடல் முழுதும் எல்லா மூட்டுமே மடங்க மறுக்கிறது. ஓர் வாடகைக் கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு […]

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

This entry is part 14 of 23 in the series 7 அக்டோபர் 2012

  1. Domaine de Courson   நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் […]