இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

This entry is part 6 of 11 in the series 11 ஜூன் 2017

Posted on June 10, 2017
 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

ஆழ விண்வெளி ஆய்வுகளுக்கு அனுப்பும் பளுமிக்கத் துணைக்கோள்கள் இப்போது நிதி சுருங்கிய மின்னுந்து விசையால் இயக்கப்படப் போகின்றன. மின்னுந்து விசை ஏற்பாடுகள் மெதுவான வேகத்தில், வெகுதூரம் செல்லக் குறைவான உந்துவிசைத் திரவத்துடன் [Propellants] பயணம் செய்ய பூதப்பெரும் ராக்கெட்டில் பயன்படுகின்றன.

எம். என். வகியா [டாடா அடிப்படை ஆய்வக விஞ்ஞானி, மொம்பை]

 

GSLV MK III ROCKET READY FOR LAUNCHING

இந்திய விண்வெளி ஆய்வகம் முதன்முதல் ஏவிய பூதப்பெரும் ராக்கெட்.

2017 ஜூன் 5 ஆம் தேதி இந்தியாவின் பேராற்றல் படைத்த பூதப்பெரும் ராக்கெட் முதன்முதல் வெற்றிகரமாக ஏவப்பட்டு, மனிதனோடு பூமியைச் சுற்றிவரப் போகும் விண்வெளிப் பயணத்துக்கு அடுத்த ஓர் மைல் கல் நாட்டியது.  140 அடி [43 மீடர்] உயரமும், 640 டன் எடையுள்ள அந்த அசுர வடிவ ராக்கெட் தென்னிந்தியாவில் உள்ள ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.   அந்த ராக்கெட்டில் உள்ள பேராற்றல் படைத்த எஞ்சின், இந்தியப் பொறியியல் நிபுணர் டிசைன் செய்துப் பல்லாண்டுகளாய் விருத்தி செய்தது.  இனிமேல் இந்தியா ஈரோப்பிய எஞ்சின்களை வாங்க வேண்டியதில்லை.  ஏவப்பட்ட அந்த ராக்கெட் மூன்று டன் பளுவுள்ள துணைக்கோள் ஒன்றை முதன்முறைத் தூக்கிச் சென்று, அதி உயரச் சுற்றுப்பாதையில் விட்டது.  இதற்கு முன் 2 டன் பளுவுள்ள துணைக் கோள்தான் தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.

விண்வெளிப் போட்டியில் 2014 ஆண்டில், குறைந்த செலவில், இந்தியா சைனாவுக்கு முன்பு செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றியதற்குப் பிறகு இந்த பூதப்பெரும் ராக்கெட் சோதனை அடுத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.  அமெரிக்கா தனது நாசா மாவன் மார்ஸ் [NASA’s MAVEN MARS] பயணத்துக்கு 671 மில்லியன் டாலர் செலவழித்தது. செந்நிறக்கோள் செவ்வாய் செல்ல இந்தியா செலவழித்தது 73 மில்லியன் டாலர்.  அடுத்து, 4 டன் பளுச் சுமக்கும் தகுதியுள்ள இந்த பூதப்பெரும் ராக்கெட் மூலம், துணைக்கோள்கள் பூதக்கோள் வியாழனுக்கும், வெள்ளிக் கோளுக்கும் அனுப்பும் திட்டங்கள் இஸ்ரோ இந்திய விண்வெளித் தேடல் ஆணை யகத்தின் குறிக்கோளாய் உள்ளன.  இம்முறை தூக்கிச் சென்ற மின்னுந்து விசைத் துணைக்கோள் மூன்று விண்வெளி விமானிகள் அமர்ந்து செல்லும் தகுதி உடையது. ஆனால் இன்னும் 7 ஆண்டுகள் கடந்து 2024 ஆண்டில்தான், மனிதர் இயக்கிப் பூமியைச் சுற்றும் விண்ணுளவி தயாராகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

Series Navigationகல்வி நிலையங்களும் விளம்பர (குறும்)படங்களும்ஆயா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *