கல்லடி

This entry is part 19 of 24 in the series 1 நவம்பர் 2015

 

 

அதிக நேரமொன்றும்

வித்தியாசமில்லை

வாய்க்காலிலிருந்து தவளை

வரப்பில் குதித்தது

மீண்டும் வாய்க்காலில்

 

பச்சோந்தி

மரமத்தியிலிருந்து

புல்லுக்குத் தாவி

பச்சையானது

 

அதிரும் காலடிச் சத்தம்

கேட்டதும்

ஆமை

ஓட்டுக்கு உள்ளே

ஒளிந்தது

 

வேட்டுச் சத்தம்

கேட்டதும்

யானைகள்

ஓடி

இடம் பெயர்ந்தன

 

கிரகணத்தில்

சூரியன்

மறைந்ததும் பறவைகள்

மரங்களுள்

தஞ்சமடைந்தன

 

இதில்

எதையுமே

பார்த்ததில்லை போலும்

அவன்

 

மூர்க்கத்துடன்

எறிந்தான்

என் மீது

முதல் கல்லை

 

பிறகென்ன?

நான் ரணமாகி

வீழ்ந்த பின்னும்

நிற்கவில்லை

கல்வீச்சு

 

சத்யானந்தன்

 

Series Navigationமகன்வினையா? அதன்வினையா?ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *