This entry is part 13 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மின்சாரக்கடத்தியாய்
திகழ்வது ஒரு காலம்

மினசாரம் கடந்து
வாழ்வது ஒரு காலம்

வானம்
தெளிவாய் இல்லாத
ஒரு காலமும் உண்டு

அது
எச்சரிக்கையாய்
இருக்கவேண்டிய காலம்

அதை
பதுக்கிவைத்திருந்தால்
ஏமாற்றமில்லை

அது
பதுங்கியிருந்தால்
ஏமாற்றம்தான்

இரவில் இரைதேடும்
எலிகளைப்போலவும்
எலிகளைத்தேடும்
பாம்புகளாகவும்
தலைகாட்டும் தருணங்கள்
அத்துபடிதான்

பெருங்காயப்பெட்டியை
திறந்துவைத்துவிட்டு
ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டு
காற்றின்மீது கறைபூசமுடியுமா?

அது
வெங்காயத்திற்கும்
கண்ணீருக்குமான பந்தம்

என்னைமீறி எதுவுமில்லை
என்றிருந்ததுதான் தவறு

என்னைப் பலமுறை
வென்றது

வென்றிருந்தால் நான்
இளங்கோ அடிகள்
வெல்லாததால் நான்
வெறும் இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

Series Navigationபாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்சன்மானம்