அன்பின் தீக்கொடி

This entry is part 24 of 41 in the series 10 ஜூன் 2012

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்

விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ
அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய்
வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி
ஓயாமல் அலைகின்றேன்-நீயோ
மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய்
இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய்
வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு
புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென
உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு
செ.சுஜாதா,
பெங்களூர்.
Series Navigationஜுமானா ஜுனைட் கவிதைகள்நெஞ்சு பொறுக்குதில்லையே

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *