This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் –

யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின்
இயற்கையான மரணத்தை?
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால்
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில்
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி
பூனைகளின் இயற்கையான மரணம்
மனித மனதைப் போல பெரும் புதிர்…

குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும்
உயர இடத்தில் பரபரக்க ஏறும் …
எப்படித் துக்கிப் போட்டாலும்
கால்கள் ஊன்றித் தரையிறங்கும்
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும்
நாக்கால் நக்கியே தூய்மையாகும்

விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில்
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி
வாழும் பூனைகள் மரணத்தின் சூட்சுமத்தை
மறைத்தே வைத்திருக்கும்…

தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப்
புதைக்குமை … மரணத்தை தம்முள்
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல்
மறையும் ஒரு நாள்.

Series Navigationபா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்