This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ரவிசந்திரன்

கவிதை கேட்டேன் காதல் தந்தாய்
காதல் கேட்டேன் காமம் தந்தாய்
கல்வி கேட்டேன் காசு தந்தாய்
காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய்
நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய்
வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய்
தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய்
மொழி கேட்டேன் பழி தந்தாய்
பாரசக்தி என் மொழியில் பிழை கண்டு எனக்கு மெளனம் தந்தாயோ ?
மெளன குருவின் காலடி கட்டை விரல் தீட்சை….

Series Navigation