எழுத நிறைய இருக்கிறது

This entry is part 11 of 19 in the series 24 மே 2015

கனவு திறவோன்

எழுத நிறைய இருக்கிறது
மனம்தான் மறுக்கிறது

ஊழல், தண்டனை,
ஆட்சி மாற்றம், ஏமாற்றம்,
சுத்த தினம், கோஷம்,
விபத்து, விந்தை என்று
ஏதேனும் நிகழ்ந்து
எழுதத் தூண்டுகிறது…
மனம்தான் நொண்டுகிறது!

வாசலைத் தாண்டி விட்டேன்
நீ அழகென்பதால்
கோலமும் ஈர்க்கிறது…
மனம்தான் பம்முகிறது!

உன் அப்பாவின் பென்சனும்
அம்மாவின் ரேசனும்
கரும் புள்ளிகளாய்
உன் சின்ன புன்னகையின் விசாலத்தில்
மறைகிறது…
இருந்தாலும் மனமோ கரைகிறது!

சூரியன் கவிழ்ந்தபின்
நிழல் நிமிருமோ?
நீ ஜன்னலை
சாத்திய போதும்
உன் நிழல் இங்கே
விழுகிறது…
ஆனாலும் மனமோ பேதலிக்கிறது!

எழுத நிறைய இருக்கிறது
கல்லூரி மாணவனின்
அரியர்ஸ் போல…
உன் கேள்விகளுக்கானப் பதிலைத் தவிர…

என்னை மட்டும் தானே பிடிக்கும்?
ஏமாற்ற மாட்டியே?
கல்யாணம் கட்டிப்பியா?
ஓடிப் போயிடலாமா?
என்று கேட்க நிறைய உண்டு
ஆனால் நீ கேட்டாய்
பிரிந்து விடுவோமா?

-கனவு திறவோன்

Series Navigationஒலி வடிவமில்லாக் கேள்விகள்ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *