கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு

This entry is part 12 of 21 in the series 27 ஜூன் 2016

ப.கண்ணன்சேகர்

ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு
அந்தாதி வடிவில் கவிதை.

தென்றலை நடத்திய தென்னவன்
திரையினை ஆண்ட மன்னவன்
கோபுரத் தமிழைப் பாடியவன் !

பாடியவன் கவிஞர் கண்ணதாசன்
பாமரன் போற்றும் எண்ணதாசன்
பாடலில் சொன்னான் தத்துவம் !

தத்துவம் புதைந்த சுரங்கமவன்
தமிழ்ச்சுவை நிரம்பிய அரங்கமவன்
வித்தகம் எழுத்தில் காட்டியவன் !

காட்டியவன் வரைந்த காவியமே!
கருத்தென நிலைக்கும் பாநயமே
காலத்தில் மறையா சூத்திரமே!

சூத்திரமே சொன்ன திரைஞானி
சுற்றிடும் இலக்கிய மலர்த்தேனீ!
சாற்றினான் மாபெரும் காவியங்கள் !

காவியங்கள் படைத்த காவியத்தை
கூவியே நானும் அழைக்கின்றேன்
குவலயம் வருவது எப்போது ?

-ப.கண்ணன்சேகர், திமிரி.

Series Navigationஉலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்காப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *