அருணா சுப்ரமணியன் கவிதைகள்

This entry is part 3 of 15 in the series 21 மே 2017

அருணா சுப்ரமணியன்

கழுவில் ஏற்றப்படும் காவல்காரர்கள்

நாள்கணக்காய்
காத்துக்கிடக்கும்
எங்களை மூலையில்
தான் கிடத்துகிறீர்கள்
நீங்கள் இல்லா நேரத்தில்
உங்கள் உடமைகளை
களவாட நினைப்பவர்கள்
கல்லால் அடிக்கிறார்கள்
தாங்கிக்கொள்கிறோம்
சில நேரங்களில்
உங்கள் மறதியால்
நாங்கள் தண்டனை
பெறுகிறோம்..
நீங்கள் சாவியைத்
தொலைத்துவிட்டு
பூட்டுக்கள்
எங்களை ஏன்
கழுவில் ஏற்றுகிறீர்கள்?

——————————–

கனவுகளைத் திருடியவள்

என் கனவுகளை
திருடியவளை
கண்டேன்…
கனவுகளை
தொலைத்ததால்
எனக்கு நேர்ந்த
துயரங்களை
சொல்லி என்
கனவுகளை
திருப்பித் தர
கேட்டேன்..
காலம் கடந்து
வந்திருக்கிறாய்
என்றாள்
என்னைப் போன்று
இருந்தவள்….

——————————–

Series Navigationதொடுவானம் 170. அப்பா வந்துவிட்டார்.உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *