This entry is part 4 of 16 in the series 20 செப்டம்பர் 2020


குணா


நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன்

கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன்

மலைமுகட்டில் பாதம் நடுங்கிட

அடிவாரம் ஆனந்தம் தந்தது

பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது

நடுக் காட்டில் நடுக்கம் வந்தது

நகர மத்தியில் பரபரப் புணர்ந்தேன்

ஒதுக்குப் புறத்தில் உல்லாசம் தெரிந்தது

கிராம சூழலில் கிலேசம் வந்தது

சாரல் காற்றினை சில்லென்று உணர

புயலைக் கண்டு மிரண்டே போனேன்

மழையினை கண்டு சற்றே ஒதுங்கினேன்

ஆற்று நீரினில் நீந்தச் சொன்னது

வெள்ளம் வந்ததும் மிரட்சி கொண்டது

பாலையின் மத்தியில் வெறுமை தெரிந்தது

சோலை கண்டதும் குதூகலித்தது

கடற்கரை வேண்டும்

காட்டைச் சார்ந்த பசுமை வேண்டும்

கிராமம் இல்லா  நகரம் வேண்டும்

நகரம் இல்லா கிராமம் வேண்டும்

சில்லென வீசும் காற்று வேண்டும்

பாலை இல்லா சோலை வேண்டும்

வாழ்ந்து பார்த்திட காசு வேண்டும்

காசைக் காட்டிடும் ஆலை வேண்டும்

காட்டைக் காத்து ஆலை போற்றி

நீரைக் காத்து காற்றைப் போற்றி

மலையைக் குடைந்து சாலை போட்டு

குழம்படி செய்து

வாழத்தலைப்பட்டேன்

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationஇன்றைய அரசியல்முள்