அறியாமை

This entry is part 10 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

 

குருவிவீடு நாமேயென்று

கூலம் அறியாது

 

வண்ணம் நமக்குள்ளென்று

வெள்ளை அறியாது

 

தின்றமீதி கழுகுக்கென்று

புலிகள் அறியாது

 

தன்வீடு பாம்புக்கென்று

கறையான் அறியாது

 

மண்ணுக்குயிர் தாமுமென்று

மண்புழு அறியாது

 

தன் எச்சம் விருச்சமென்று

காகம் அறியாது

 

தன்மூச்சு உயிர்க்காற்றென்று

செடிகள் அறியாது

 

விபூதி நாம்தானென்று

சானம் அறியாது

 

தாகம் தணிப்போமென்று

மழை அறியாது

 

எறும்புக்கு நிழலென்று

இலைகள் அறியாது

 

பாலுக்கே நாமென்று

பசுக்கள் அறியாது

 

பறப்பது தன்னாலென்று

காற்று அறியாது

 

தன்கனி கிளிக்கென்று

மரங்கள் அறியாது

 

மண்னுக்குறுதி நாமேயென்று

வேர்கள் அறியாது

 

வெற்றி தன்னாலென்று

தோல்வி அறியாது

 

புயல் நாம்தானென்று

தென்றல் அறியாது

 

தன் எச்சில் புடவையென்று

பட்டுப்புழு அறியாது

 

நம்மால் முடியுமென்று

நாமே அறியோமே

 

அமீதாம்மாள்

Series Navigationபாரதியும் சிறுகதை இலக்கியமும்என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *