This entry is part 10 of 10 in the series 3 ஏப்ரல் 2022

 

செ.புனிதஜோதி

எங்கிருந்து

வருகிறது

மலர்களின் மகரந்தமணம்

எட்டிப்பார்க்கையில்..

 

 

அல்லி,தாமர

ரோஸ்,மல்லி

சாமந்து பூ..பூவே..

கூவிக் கூவி

விற்கும்…

 

 எம்மொட்டுவின்

வாய்மொழியில்

 வெறும்கூடையும் மணந்தே

எம்மை வரவேற்றது.

 

செ.புனிதஜோதி

சென்னை

Series Navigation“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து – 2