‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !

This entry is part 5 of 12 in the series 15 மே 2022

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
 
அந்தத் தீப்பொறி விழுந்தது
இவன் நட்பின் இனிய
பசுமையான மென் பிரதேசங்கள்
எரிந்து கருகின
 
இடைவெளி 
அந்த நண்பர்களைக்
கடுமையாக
அமைதிப்படுத்திவிட்டது
 
ஒரு மலரின் எல்லா இதழ்களும்
மீண்டும் கூம்பி மொட்டானதுபோல்
அவர்கள் மௌனமானார்கள்
 
அன்பு கெட்டிதட்டிப்போய்
ஆழ்ந்த மௌனத்தில்
உறைந்து கிடக்கிறது
 
ஆனாலும் இப்போதும்
அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்
உயிர்ப்பில்லாமல் …
 
 
Series Navigationஇலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்பயணம் – 3

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *