சற்று யோசி

This entry is part 8 of 14 in the series 12 ஜூன் 2022

குணா

துயரம் என்பது எண்ண ஓட்டம்

அது உன்னை செயலிழக்க கூடாது

 

மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு

அது உன்னை செயலற கூடாது

 

சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம்

அதுவே குரூரங்களின் கூடாரமாக கூடாது

 

சலனங்கள் நினைப்புகளின் வித்து

அது சஞ்சலங்களாய் தலை தூக்க கூடாது

 

துக்கம் கடந்த கால நினைவலைகள்

அது கடந்து போக வேண்டியது

 

கோபம் இயலாமையின் உச்சகட்டம்

நிதானத்தால் தவிர்க்க வேண்டியது

 

பொறுமை பக்குவத்தின் மேம்பாடு

காலத்தால் வேண்டிய கட்டாயம்

 

அமைதி ஆரவாரங்களின் இறுதிநிலை

அனைத்திற்குமான இறுதிகட்டம்

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationவாழ்க்கைப் பள்ளத்தை நிறைக்கும் தண்ணீராய்……….பூ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *