மழை மேகக்கவிதை

மழை மேகக்கவிதை

ஜெயானந்தன்  உடைந்து போன மேகங்களை பார்த்து, பார்த்து பூரித்தது பூமி. இறுகிப்போன மனங்களில் கூட  ஈரம் சுரந்து ராகம் பாடின. பூமியிலே விழுந்த அமிர்த மழை காட்டாறாய் கவிதை பாடி,  ஆடிக்கு போட்ட விதை  அறுவடைக்கு ஆடின. ஆதிலெட்சுமி கல்யாணத்துக்கு மாப்பிள்ளை…
போகாதே நில்.

போகாதே நில்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி. 'இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு''எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது''ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா''ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்''அதான் எதுக்கு னுதான் சொல்லேன்''நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்''சரி…

வௌவால் வந்துவிடும்

வளவ. துரையன் இந்தக் குளிர்காற்றுஇன்று வீசிய வெப்பத்திற்குஇதமாகத்தான் இருக்கிறது.இன்னும் கொஞ்சநேரம்சென்றால் இரவும் குளிரும்இன்பமும் திகட்டுமன்றோ?உச்சந்தலையில் உறைக்கும்வெப்பத்தின் சுவடுகள்உள்ளங்கால் வரைஊடுருவிப் பார்க்கின்ற்ன.இதுவே பழகிவிடும்போலிருக்கிறது.துன்பத்திலும் இன்பமா?பகல்முழுதும்எல்லாச் சாலைகளும்பாலையாகித்தலைவனைப்பிரிந்ததலைவியாகத் தவிக்கின்றன.மாலையில் கூட வரும்மஞ்சள் வெளிச்சமும்அச்சமூட்டுகிறது.இன்னும் சற்று நேரத்தில்வௌவாலும் ஆந்தையும்வட்டமிட வந்துவிடும்.
அமைதி

அமைதி

வளவ. துரையன் இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும் இப்படி இருக்காது. அம்மாவிற்கு வானொலி கேட்பது மிகவும் பிடிக்கும். அது காலை முதல்…
ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

நா. வெங்கடேசன்  [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு…

அழிவுகள்

அமீதம்மாள் வெட்டுக்கிளிக் கூட்டம்சிட்டுக்குருவியைத்தின்றுவிட்டனநெகிழி ஆப்பிள்கள்அசல் ஆப்பிளைஅழித்துவிட்டதுகற்பூரத்தில்கருவாட்டின் வாசம்பாலையும் இரத்தத்தையும்மென்பொருள்செய்கிறதுசெயற்கை நுண்ணறிவுநெய்த ஆடைநிர்வானம் மூடவில்லைபுணர்தலின்றிபிள்ளை குட்டிகள்ஊடகங்களில்பொய்களுக்கேபூமாலைகடல்களுக்குமேய்ச்சல் நிலமாய்பூமிமண்ணை வெல்லமனிதக் கொலைகள்விவசாய நிலங்களில்வெடிகுண்டு விதைகள்பற்றி எரிகிறதுமொத்தக்காடும்உதிக்கிறது சாம்பலில்புதிய காடுஅமீதாம்மாள்
நின்றாடும் சிதிலங்கள்.

நின்றாடும் சிதிலங்கள்.

ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின்…
கவிதைகள்

கவிதைகள்

ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல்…
அங்காடி வண்டி

அங்காடி வண்டி

அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று…
கரை திரும்புமா காகம் ?…

கரை திரும்புமா காகம் ?…

ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு... எள்ளு சாதமும், சதா...நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் - அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை.…