சந்திரமுக சகமனுஷி

1 _ அநாமிகா  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன....’  அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு.... ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.  ”பரவாயில்ல, வேண்டாம்மா”  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி,கால்மாற்றி நின்றுகொண்டாள்.  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக்கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்கநின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின்கணவருக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின்அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக்கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதியின்இருமருங் கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாகஅன்போடு வாங்கிவரக்கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும்மனைவியும் ’செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்...அப்படியே இருக்கட்டும்.....’ அவள்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 18

பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில் முக்கியமானவர்கள் - சரஸ்வதியும் அவள் கணவனும் அவர்களுடைய கைக்குழந்தையும்தான். கடைசியில் கணவனிடமிருந்து விமோசனம்…

பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக

இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில்  ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம்…

யோகி (கவிதை)

அந்த வீதியில்தான்  நடந்து சென்றான்.  அதே வீதியில்தான் பள்ளிக்கு சென்றான்.  அதே வீதியில்தான்  சைக்கிள் பழகினான்.  அதே வீதியில்தான்  நண்பர்களும் இருந்தார்கள்.  அதே வீதியில்தான்  காதலியும் இருந்தாள்.  அதே வீதியில்தான்  பிள்ளையார் கோவிலும்  மசூதியும், சர்ச்சும் இருந்தது.  அதே வீதியில்தான்  வாழ்க்கையும்…

மௌனியும் நானும்

பி.கே. சிவகுமார் (ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.) மௌனி என்கிற பெயர் என் பள்ளிக் காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி இருந்த போதிலும், மௌனியை நான்…

தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்

வணக்கம், நலமா? காற்றுவெளி இதழின் சிறப்பிதழ் வரிசையில் விரைவில் இங்கிலாந்து வாழ் ஈழத்து தமிழ்ப்படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இதழாக அச்சில் வரவுள்ளது. படைபுக்கள்(கதைகள்) காற்றுவெளி இதழில் 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமலும்,யூனிக்கோட் எழுத்துருவிலும்(எழுத்துப் பிழைகள் இன்றி) அமைதல் வேண்டும்.காற்றுவெளி இதழின் பார்வையில் படாமலே…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர் குழுமம் நடத்தும் வாராந்திர சிறுகதை உரையாடலின் பரிசுத் திட்டம்: நிகழ்ச்சியில் பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து கலந்து கொள்கிற உறுப்பினர்களுக்கு (நிர்வாகிகள் அல்லாதோருக்கு) - 12வது வார முடிவில் $20 அமேசான் கிப்ட் கார்டு. இதில் இரண்டு…

செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் இந்த வாரம் (ஆகஸ்ட் 27, 2025) நடத்திய செழியனின் ஹார்மோனியம் சிறுகதை கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. செழியனும் கலந்து கொண்டு, முழுமையாகக் கேட்டு, கடைசியில் தன் கருத்துகளையும்…

பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாவண்ணன் எழுதிய சாம்பல் சிறுகதை. கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் நான்காவது நிகழ்ச்சி இது. நாள் & நேரம்:செப்டம்பர் 3, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணிசெப்டம்பர்…

இலக்கியப்பூக்கள் 349

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் ( www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 349 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,  கவிஞர்.சுகந்தி தாஸ்(தமிழகம்)(கவிதை:மீள்…