This entry is part 1 of 10 in the series 15 மார்ச் 2026

நேற்றிரவு தேங்கிய மழைக்குட்டையில்
மூக்கு நனைக்கும் காகம்

குல்மொஹர் மரத் தண்டருகே
குளம்பு பதித்து நிற்கும் வெள்ளைமாடு

சைக்கிள் மிதிக்கும் உடலில்
வியர்வை புழுக்கும் சூரியன்

தடுப்புக் கம்பி குறுக்கில்
வாலசைக்கும் தொண்டை சிவந்த கரும் குருவி

எவர் இட்டார் எவர் நீரூற்றி வளர்த்தார்
என்றறியா என் உயர வேம்பு

தூரத்துக் காட்சியில் கும்பலாய்க் காணும் மரவரிசை

எல்லாவற்றையும் வாசிப்பதான மனிதனின் கண்ணில்
சதா உறுத்தும் விலைவாசி நிகழின் கவலை மணல்.

– பா.சத்தியமோகன்

Series Navigation(அஞ்)ஞானம்