முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார். சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள் பேசும் ஆற்றலை அடைந்தான். […]
ரவி அல்லது ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்களின் பேச்சுகளில் பகட்டுகளைத்தவிர வேறெதையும் காணமுடியாமல் இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் சலிப்பற்று தேர்ந்த பயிற்சி எடுத்தவர்களாக பேசிக் கொண்டே இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் பரிவாளர்களாக தன்னைக் காட்ட முயன்றது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவர்கள் கூடும்பொழுதெல்லாம் புறம் பேசுவதில் திளைத்து இருந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது அவர்கள் கூடுமிடத்திலெல்லாம் இவனொரு மௌன மடையனென பேசிக்கொண்டது. ஆச்சரியமாகத்தான் இருந்தது. அன்றொரு நாள் அவர்களின் […]
–பாலமுருகன்.லோ நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஒருவித படபடப்பு. ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர் அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார். என்றும் போல் அன்று கணேசன் அலுவலகம் சென்ற போது, அங்கிருந்த நண்பர்கள் சக […]
ரவி அல்லது இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் […]
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை முன்னுரை குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது. வாழ்வியல் விழுமியங்கள் படைப்பாளர்களின் […]
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா. ஆய்வுச்சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் […]
ஆர் வத்ஸலா தனியே நின்று மகளை வளர்த்ததால் என்னை தலை சிறந்த தாய் என கூறினார்கள் யாவரும் அதை நானும் நம்பத் தொடங்குகையில் புரிய வைத்தாள் எனது மகள் என்னை விட சிறந்த தாய் உண்டு என தன் மக்களோடு எனக்கும் தாயாகி
ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின் நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அவன் தரப்பு சாக்குகளை- அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை அவன் நண்பனுக்கு பெரிய பிரச்சினை அவனுக்கு மனச் சோர்வு- இப்படி ஏதாவது கற்பித்துக் கொண்டு பின் சலித்து அழுது சூளுரைக்கிறேன் ‘இன்றோடு அவன் உறவை துண்டித்துக் கொள்கிறேன் நிரந்தரமாக’ என்று தயவு செய்து கேட்காதீர்கள் யாரும் எத்தனையாவது முறையாக என்று
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 341ஆம் இதழ், 30 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழும், சென்ற இதழைப் போலவே திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: ‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! பதிப்புக் குழு கட்டுரைகள் கவிதைகள் சிறப்பிதழ் சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ் பாலாஜி ராஜு இலக்கியம்/புத்தக அறிமுகம் கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை […]
-ரவி அல்லது . இயற்கையின் மீதான தன் ஆதுரங்களை அதன் அழகியலில் கவிதைகள் வடித்த வண்ணம் பெரும் முயற்சிகள் இங்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வுத் தெளிவில் உந்தும் கவிதைகள் வந்த படியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க. ஒரு கவிஞனின் கவிதைகள் அவன் கடந்து வந்த காலத்தின் பாடுகளை அதன் கூறுகளை பேசிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்தக் கவிஞன் இச்சமூகத்தின் பால் கொண்ட வாஞ்சையின் வெளிப்பாடு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் […]