முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை சைவ உலகின் முதன்மையர் காரைக்காலம்மையார். தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே முதலானவர். முதன்மையானவர் ஆவார். அவரின் பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் செழுமை மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம் ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய இன அடையாளக் குறியீடாகும். தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ் வளர்ச்சி என்பதும் மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது. தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் […]
முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை மனித சிந்தனை வளத்தின் களஞ்சியம் திருக்குறள். திருக்குறளின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை. தேவையானவை. மனிதனில் உதிக்கும் அத்தனை சிந்தனைகளுக்கும் வழியும், வாய்ப்பும், தெளிவும் திருக்குறளில் உண்டு. தற்காலத்தில் கணினித் துறையின் புதிய சிந்தனை மற்றும் செயல் வளமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவியல் துறைக்கான பல கூறுகளும் அத்துறையின் சிந்தனை மற்றும் செயல் நேர்த்திக்கும் வழிவகை காட்டுகின்றது திருக்குறள். திருக்குறளை இன்றைய செயற்கை நுண்ணறிவியல் […]
அன்புடையீர் வணக்கம்கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நம் கம்பன் கழகத்தின் வழியாக மீண்டும் நாம் அனைவரும் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 4,5,6 ஆகிய நாட்களில் காரைக்குடியிலும், 7ஆம் நாள் நாட்டரசன் கோட்டையில் வழக்கம் போல்கம்பன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நாட்களில் 5 ஆம் தேதி அன்று ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பெற்றுள்ளது. அவ்வறிப்பின் திருந்திய வடிவம் இதனுடன் இணைத்துள்ளோம். தாங்கள் கட்டுரை தந்து நான்கு நாட்களும் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறோம். முன் […]
முனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து விடும் சூழல்களே உள்ளன. பழைய இலக்கியங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற விழிப்புணர்வு இல்லாத நிலையிலும் சுற்றுச் சூழலைப் பாடுவது […]
முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை. இந்திய மண்ணில் உள்ள புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. இந்தியாவின் பல்வகை சமயங்களின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது. காசியில் சைவம், வைணவம், பௌத்தம், இசுலாம் போன்ற பல சமயம் சார் இடங்கள், மடங்கள், நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதன் பெருமை சொல்லில் […]
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை திருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார். உரையாசிரிய மரபில் ஆண்களே கோலோச்சிக்கிக் கொண்டிருந்த நிலையில் இப்பெண் வரைந்துள்ள திருக்குறள் உரை, உரையாசிரிய மரபில் முதல் பெண் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. மருங்காபுரி ஐமீன்தாரிணியாக விளங்கிய இவர் திருக்குறள் […]
விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய […]
முனைவர். மு.பழனியப்பன் பொருளர் கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்து் உள்ளோம்.அதன் தொடர்பான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன். ஏற்றுப் பிரிசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். செட்டிநாடும் செந்தமிழும் கருத்தரங்க அறிவிப்பு மடல்
மு.ப. பாரத தேசம் பழம் பெரும் தேசம். நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் அவர் பெயர் அத்வான் பிகார் மாடிபாய். அவரின் செயல்கள் அமைதியும் ரகசியமும் பொதிந்தன. ஒருமுறை ஓர் ஊர் செல்வார். திரும்புவதற்குள் இன்னொரு ஊருக்கு அறிவிக்காமல் சென்றுவிடுவார். காவல் காப்பவர்களுக்கும் தூதர்களுக்கும் பெருத்த விழிப்புணர்வை அவர் தந்தார். வங்கிகளுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவருக்கும் தலைமுறைக்காலப் பகை. எப்பொழுதோ ஒரு முறை அவர்வங்கிக்குச் சென்று கால்கடுக்க நின்றுவிட்டார். இதன் காரணமாக எல்லோரையும் வங்கிக்கு முன் நிற்க […]