ஆர் வத்ஸலா எனக்குள்ளது ஒரு துன்பம் என உன்னிடம் நான் சொல்லிக் கொண்டேன் உனக்கு துன்பமே இல்லை என நான் கருதுவதாக அர்த்தம் செய்துக் கொண்டு கோபித்தாய் நீ உன்னிடம் என் துன்பத்தைச் சொல்லி ஆற்றிக் கொள்ள எண்ணியது மட்டுமல்ல உன்னை எனக்கு உற்றவனாகக் கருதியதே தவறு என புரிந்து விட்டது
சோம. அழகு வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]
தமிழில் : வசந்ததீபன் ________________________________ (1) நீ இந்திரன் கெளதம் ராம் எந்த உருவத்தில் இருந்தாலும் எப்போது புரிந்து இருக்கிறாய் என்னை கெட்ட பார்வை சாபம் இரட்சிப்பு இதுவாக இருந்து கொண்டு என் நியதி தவறாக தங்கிப் போனேன் நான் தான் ஒவ்வொரு முறை நீ கடவுள்களின் ராஜா தர்ம பாதுகாவலர் மீட்பர் மஹான்களுக்கு ஆனாய் மற்றும் நான் ஒவ்வொரு முறை அப்பாவி அகல்யா. ஹிந்தியில் : ரஞ்சனா ஜெய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் (2) நான் […]
https://www.google.com/amp/s/www.hindutamil.in/amp/news/supplements/ilamai-puthumai/140073-.html
ஆர் வத்ஸலா ஒன்று விட்ட அத்தை பையன் சிறு வயதில் அவனுக்கு இணையாக மரமேறி விழுந்து பாட்டியிடம் “கடங்காரி” திட்டும் அம்மாவிடம் அடியும் மருத்துவர் அப்பாவிடம் மாவு கட்டும் கிடைத்தன தாவணி போடுகையில் சினிமாத்தனமான ரோஜா நிறக் கனவுகளில் அவனுடன் பேசி இருக்கிறாள் விழித்தவுடன் பயந்திருக்கிறாள் அம்மாவை நினைத்து புடவை உடுத்திய பின் அவன் வீட்டுக்கு வருகையில் அம்மா சொல்படி அவள் கொடுக்கும் காபியை விரல் படாமல் வாங்கிக் கொள்வான் அவன் மணப் பேச்சை அம்மா எடுத்த […]
ஹிந்தியில் : முஸாபிர் பைட்டா தமிழில் : வசந்ததீபன் ______________________________ நான் எங்கும் சுற்றித் திரிய விரும்பமில்லை இங்கே வரை என எனது பிறந்த பூமி பங்க்ராஹா வீட்டின் அருகே தான் அமைந்துள்ளது சொல்லப்படும் சீதாவின் பிறந்த இடம் சீதாமடீயும் ( தோதி வந்தனை சிறந்தாக இல்லை சமூக காரியங்களின் சம்பந்தத்தில் தான் இருக்கிறது ) நான் ஊனமுற்ற நம்பிக்கையில் விசுவாசம் வைப்பதில்லை . என்னுடைய இரண்டு கைகள் பாதுகாப்பானதாக இருக்கின்றன ஆதாராமாக இருக்கின்றன ஆனால் இவைகள் […]
ஆர் வத்ஸலா தள்ளாடி தள்ளாடித் தான் நடக்க முடிகிறது இப்போதெல்லாம் என் கால்களின் வழியே ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறது தள்ளாமை அதனை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக நானும் எதற்கும் இருக்கட்டும் என்று என்னவர் வாங்கி வைத்த சக்கர நாற்காலி அமர்ந்திருக்கிறது எங்கள் அறையின் ஒரு மூலையில் என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் நடக்கிறேன் அடி கணக்கு ஒப்பிக்கும் கருவியை சுமந்தபடி தினமும் மும்முறை மருத்துவர் சொன்னபடி மைல் கணக்கில் நடந்தாலும் இரண்டாயிரம் அடிகளே நடந்ததாக கூறுகிறது […]
சசிகலா விஸ்வநாதன் அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் ஆவல்.துள்ளிக் துதிக்கையில் இன்பம்.ஒளிந்து விளையாடுவதில் பேரின்பம்.விசையோடு ஓடி விளையாடவும்;இசைந்து பலதும் பேசிடவும்;நேசத்துடன் கேலி பேசிடவும்;பாசத்துடன் கட்டி அணைக்கவும்;மடி மீது கண்மூடி உறங்கிடவும்;மென்மையாய் தலை கோதிடவும்;*மகனே* !நீ என்றும் என் சேலை மடிப்பில் சிறு மதலையாய்;என் மனதில் சிறு பிள்ளையாய்;என் கனவில் கள்ளம் கபடற்ற பாலகனாய்இருக்க;என் கண்ணெதிரில் மட்டும்;முற்றிலும் வேறு ஒருவனாய்;நினைவில் முதிர்ச்சியடைந்தஆண்மகனாய்வளர்ந்த பெரியவனாய் நிற்கும் விந்தைதான்என்னே! என்னே! அள்ளி எடுக்கத் தான் ஆசை.கிள்ளி விளையாடத் தான் […]
பெங்காலியில் : சுனில் கங்கோபாத்யா ஹிந்தியில் : ரண்ஜீத் ஸாஹா தமிழில் : வசந்ததீபன் (1) எழுதுவதும் எழுதியபடி வாழ்வதும் ____________________________________________ புத்தகங்கள் பயமுறுத்த தொடங்கியிருக்கின்றன இப்போது நான்கரை ஆண்டுகளின் வயதில் தான் எழுத்துக்களின் அறிமுகம் மற்றும் அதற்கு பிறகு கடவுளே…… தெரியவில்லை எத்தனை யுகமும் நித்தியமும் கழிந்து அச்சடிக்கப்பட்டது எழுத்துக்களும்… எழுத்துக்களும் தான் கண்களுக்கு முன்னால் முறைத்துப் பார்த்துக் கொண்டு ஆயிரம் _ ஆயிரம் பக்கங்கள் மற்றும் எத்தனை படிக்கப்பட்டு இருக்கிறது என்ன அதைவிட அதிகமாக […]
ஆர் வத்ஸலா காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து அம்மா தந்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் கண்ணாடியில் முகம் பார்த்து அவசரமாக தலை வாரி லேசாகக் கோதிக் கொண்டு கட்டிக் கொடுக்கப் பட்ட சாப்பாடு திருத்தப்பட்ட மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுடன் ஸ்கூட்டரை உதைத்தான் எதிர்வீட்டுப் பெண் அப்போது தான் கிளம்புவாள் பணிக்கு என்றும் தெருக் கோடி வரை அவள் பின் போகலாம் என்றும் அறிந்ததனால் அவள் பெரிய அழகியல்ல என்றும் இவன் முகத்தை அவள் பார்த்ததில்லை […]