அழகியசிங்கர் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை. நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது. பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும். ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும். முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. […]
சோம. அழகு சக மனிதனின் வாய்மொழிக்குக் காது கொடுத்து பச்சாதாபத்தை (empathy) உருவாக்கும் oxytocinஐ பெறுவதைக் காட்டிலும் அந்த 6 அங்குலத் திரை ஏற்றித் தரும் dopamine பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதிக மனநிறைவைத் […]
மஹ்மூது நெய்னா . எஸ் – கீழக்கரை உனக்கு வேலை தர்ரன்ப்பா…. ஆனா துபையில கிடையாது … பாக்குவுக்கு போறியா? துபாய் முத்தீனாவில் இருந்த கம்பெனி கட்டிடத்தின் மூன்றாவது மாடி அலுவலகத்துக்கு வந்து, மூன்று மனி நேரங்களாக காத்திருந்து, சலாமலைக்கும் காக்கா.. என்று சொல்லி சந்தித்தபோது, தடாலடியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை நிலைகுலைய வைத்தார் அசன் தம்பி…. ஏன்ப்பா ரெம்ப யோசிக்கிறா… அங்க நம்ம புள்ளைவ இருக்கிறாங்க… மீரான் இருக்கிறாரு, […]
பநியான் எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாகப் போடுவதற்கும் ஒரு திறமை வேண்டியிருந்தது .அது சிற்சபேசன் வாத்தியாரிடம் கச்சிதமாகவே இருந்தது .அவரென்ன செய்வார் ? எப்படிப் பார்த்தாலும் அவர் பூகோள வாத்தியார்தானே ? .அவர் போட்ட நாலைந்து கணக்குகளுமே தப்பாகிப் போனதுதான் பிரச்சினையே. அதுவும் அவர் ஓய்வு பெற்ற காலகட்டத்தில் . தன் பையன்கள் இரண்டு பேருக்கும் அடலேறு , ஆடலழகன் என்று பெயர் வைத்திருந்தார். தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பது பற்றின் வெளிப்பாடு […]
குணா (எ) குணசேகரன் இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன் ஏறி பரதவர் மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புல் ஓப்பும் எமக்கு நலன் எவனோ? புலவு நாறுதும், செல நின்றீமோ! பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மோடு புரைவதே அன்றே; எம்மனோரில் செம்மலும் உடைத்தே தடகளம் […]
நாகேந்திர பாரதி ————————————————————————– ( நவீன விருட்சம் நிகழ்வில் ‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் ) குறள் வெண்பா ————————— தொய்விலா எண்ணம் துணையெனக் கொண்டிடில் பெய்யெனப் பெய்யும் மழை சிந்தியல் வெண்பா ——————————– துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய் எய்வது என்றே இருந்திடில் எப்படிப் பெய்யெனப் பெய்யும் மழை இன்னிசை வெண்பா —————————— எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம் செய்தியைக் கேட்டுச் […]
ஆங்கிலத்தில்: மத்ஸுகி மஸுதானி தமிழில்: ட்டி. ஆர். நடராஜன் 1. நான் என் மனைவியைச் சந்தித்தேன் காத்மாண்டுவில். நாங்கள் இருவரும் சேர்ந்து பல மாதங்கள் பிரயாணித்தோம். கனடாவை அடைந்து நின்றோம். அங்கேயே தங்கி விட்டோம். மூன்று குழந்தைகளை வளர்த்த பின்பும் பிரயாணிகளைப் போலவே இருந்தோம். கஃபேக்களில் திரிவதும் தெருக்கடைகளை வலம் வருவதுமாக அக்கம்பக்கத்தில் நடமாடினோம். செல்வதற்கு வேறு இடமின்றி. 2. என் மனைவி சொல்லுகிறாள், நீ எப்போதும் உன் மேஜை முன் இருக்கிறாய். […]
அழகியசிங்கர் இப்போது நான் எழுதப்போகிற கவிதைத் தொகுதி சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் கவிதைப்புத்தகத்தின் பெயர் ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி.’ இதுவும் மணல்வீடு பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது. கவிதைகளை எழுதியவர் செல்வசங்கரன். இதில் சில கவிதைகளைக் குறித்துதான் பேசப் போகிறேன். இக் கவிதைகளை எதுமாதிரி வகைமைப் படுத்துவது என்று தெரியவில்லை. பெரும்பாலான கவிதைகள் அதீத மன நிலையில் எழுதப் பட்டிருக்கின்றனவா என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண நிகழ்ச்சி அசாதாரணமாகப் பார்க்கப் படுகிறதா என்று தோன்றுகிறது. […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் இன்று வெளியானது. இது ஒரு சிறப்பிதழ். வங்க மொழியின் படைப்புலகைச் சிறப்பிக்கும் வகையில் மொத்த இதழும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இதழுக்கு நிறைய படைப்புகள் வந்து சேர்ந்ததால், அடுத்த இதழையும் வங்க மொழிச் சிறப்பிதழாகப் பிரசுரிக்கவிருக்கிறோம். பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்தச் சிறப்பிதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: வங்கச் சிறப்பிதழ்: அறிமுகம் சிற்றடி: ஏன் இந்த முயற்சி? – மைத்ரேயன் தாகூரின் கூப்பிய கரங்கள் – எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியமும் ரசகுல்லாக்களும் – நம்பி பொன்னுலகின் வேடிக்கைகள் – கோகுல் பிரசாத் நீலகண்டப் பறவையைத் தேடியவர் – அம்பை கனன்றெரியும் நீர்வெளி – எம் நரேந்திரன் நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம் – நரேன் சத்யஜித் ரேயின் ரவிஷங்கர் – இரு கலைஞர்கள் – ரா. கிரிதரன் […]
அழகியசிங்கர் சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்” என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது. நம் முன்னால் இருப்பவர் ஒரு சஞ்சிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார். யாருடைய கதை? சர்வோத்மன் சடகோபன் கதையைத்தான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொடங்குகிறது. எதிரில் இருப்பவருடன். ஆனால் எதிரிலிருப்பவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சொல்பவர் […]