பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )

This entry is part 27 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அறுபதுகளில் வந்த படம், சிலரின் அரிய முயற்சியால் டிஜிட்டலாக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றிருப்பது ஆச்சர்யம். பிரம்மாண்டமும், துல்லிய வண்ணமும் காரணமாக இருக்கலாம். சிவாஜியைப் பற்றி அறியாத, அப்போது பிறந்திராத இளைய தலைமுறை கூட, அவ்வப்போது மெல்லிய சிரிப்பினை வெளியிடுவது, இது ஒரு திரைக்காவியம் என்றே பறை சாற்றுகிறது. கர்ணன் வெளிவந்த புதிதில் சாந்தி தியேட்டரில் திரையிட்டிருந்தார்கள். பெரிய கட் அவுட்டுகளில், தங்கத் தேர்களில் சிவாஜியும்( கர்ணன்)என் டி ராமாராவும் ( கண்ணன் ) எதிரெதிர் நின்று கொண்டிருக்கும் போஸ், […]

சம்பத் நந்தியின் “ ரகளை “

This entry is part 9 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ராம் சரணின் ‘ மகாதீரா ‘ தமிழில் டப்பாகி மாவீரனாகச் சக்கை போடு போட்டதில் குதூகலம் மேலிட சூப்பர் குட் சவுத்திரி ‘ரச்சா’ அரவம் மாட்லாட ரகளை ஆக்கியிருக் கிறார். அவலை நினைத்து உரலை இடித்த கதைதான். இத்தனைக்கும் அவர் மகன் ஜீவாவின் படங்கள் தெலுங்கில் நன்றாகப் போவதாகத் தகவல். சூரியநாராயணன் ( பார்த்திபன் ), அவர் நண்பர் பெருநிலக்காரர் ( நாசர் ) இருவரும் தமக்கிருக்கும் நூறு ஏக்கர் நிலத்தைக் உழுபவர்களுக்கே குத்தகைக்கு விடும் காட்சி […]

தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)

This entry is part 7 of 44 in the series 15 ஏப்ரல் 2012

அரியநாச்சி ஒலி அறிமுகமான 1929ல் இருந்து, 1940 வரை, பதினோரு வருடங்கள் மௌனப்படங்களை மட்டுமே எடுத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார் சாப்ளின்! காரணம், ‘வார்த்தைகள் ஒரு விஷயத்தைத் தவறாகவே புரிந்துகொள்ள உதவுகின்றன’ என்ற சாப்ளினின் கோட்பாடுதான். நவின உத்திகளையும் தொழில்நுட்ப வசதிகளையையும் நிராகரத்துவிட்டு யாராலும் இப்போ வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது. இந்த நிலையில் உலகம் இயங்கிவரும்போது ஆர்டிஸ்ட் படத்தை பழைய ஊமைப்படமாக கருப்புவெள்ளையில் எடுத்து ஆஸ்கார் விருதும் பெற்றிருப்பதால் அறிவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும், பிரக்ஞையற்றுப் பின்தொடரும் பல நம்பிக்கைகளுக்கு எதிரானவற்றை […]

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘

This entry is part 13 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, புகழ் நட்சத்திரங்களின் படங்கள் மத்தியில் சிக்கி, நசுங்கி, வெளியேறிய படம். முரணாக, படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த வெங்காயம்! இயக்குனர் சேரன் அதைத் துடைத்து மறு வெளியீடு செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள். காவல் அதிகாரி அன்புமணிக்கும் தமிழுக்கும் காதல். கிராமப்புறங்களில் திடீரெனக் காணாமல் போகும் போலிச்சாமியார்களைக் கண்டுபிடிக்கும் பணி அன்புக்கு. சாமியார்களைக் கடத்த கையாண்டிருக்கும் உத்திகளும் கிராமத்துப் பின்னணியிலேயே. அன்புமணி, கடத்தி கட்டி வைத்திருக்கும் சாமியார்களைக் கண்டுபிடிக்கும் முன்பே, […]

ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘

This entry is part 27 of 40 in the series 1 ஏப்ரல் 2012

தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன். இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு. இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. […]

விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘

This entry is part 3 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இந்தோ சினி அப்ரிசியேசன் போரம் என்கிற அமைப்பு, பல ஆண்டுகளாக, உலகத் திரைப்படங்கள் திரையிடலை, நடத்திக் கொண்டு வருகிறது. சென்னை ருஷ்ய கலாச் சார மையத்துடன் இணைந்து, இந்த வாரம் நடத்திய ஐந்து நாட்கள் திரையிடலில், இந்தியப் பட வரிசையில் காட்டப்பட்ட படம் தான் விண்மீன்கள். தாயின் வயிற்றில் இருக்கும்போது, தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இறுக்கியதால், போதிய பிராணவாயு உடலில் சில பாகங்களுக்கு போகவில்லை. அதனால் நரேன், மீரா தம்பதியர்க்குப் பிறக்கும் ஜீவா cerebral palsy […]

ஷண்முகராஜின் ‘ ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி ‘

This entry is part 31 of 42 in the series 25 மார்ச் 2012

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு, சமுத்திரக்கனியும் சசிகுமாரும் ‘ நாடோடிகள் ‘ படம் எடுக்க முனைந்த போது, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பு கொடுத்தவர் மைக்கேல் ராயப்பன். அதே நம்பிக்கையுடன், ஷண்முகராஜை படமெடுக்க அழைத்திருக்கிறார். 174 நாட்கள் நடிப்புப் பயிற்சி, 71 புதுமுகங்கள், முகமே இல்லாத பாட்டு என்று ஏகத்துக்கு விளம்பரம். முத்தங்கள் என்ற தலைப்பு இருப்பதால், கமல் பாராட்டியதாக, படமெடுத்து போஸ்டரில் போட்டுவிட்டார்கள். எல்லாமே உதடு ஒட்டாத, பறக்கும் முத்தங்கள் ஆகும் என்று ராயப்பன், கனவு கூட […]

சோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)

This entry is part 14 of 42 in the series 25 மார்ச் 2012

அட(ய்)யும் சக்கை பிரதமனும் கழிக்கா(த்)த கேரளக்காரன் உண்டோ? சோவின் நாடகமும் நையாண்டியும் களிக்காத தமிழ்ப் பாமரன் உண்டோ? டி.வி. வரதராஜனின் யுனைட்டெட் விஷ¤வல்ஸ் குழு மீண்டும் மேடையேற்றிய நாடகம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்குப் பிறகு ( 1971 ) மீண்டும் மேடையேற்றுவதால், தற்கால அரசியல் கிண்டல்கள் ஏதும் இருக்குமோ என்கிற நப்பாசையில், வந்த கூட்டம், கடைசியில் ஏமாந்து திரும்பியது. சோ எதையும் மாற்றவில்லை. மாற்றவும் விடவில்லை. வந்தவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஐம்பது ப்ளஸ். அதனால் பலமுறை கேட்டது […]

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

This entry is part 36 of 36 in the series 18 மார்ச் 2012

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 55 இந்த வாரம் படங்கள் இருப்பதால் பிடிஎப் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து படித்துகொள்ளவும்   பிடிஎப் கோப்பு Samaskritam kaRRukkoLvom 55 (1)   ஒலிப்பதிவு Samskritam 55          

சத்யசிவாவின் ‘ கழுகு ‘

This entry is part 30 of 36 in the series 18 மார்ச் 2012

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது. படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை. இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு சாதாரண மெட்டை, ஆர்கெஸ்ட்ரேஷனில், இன்னொரு தளத்திற்குக் கொண்டு போக முடியும் என்று, ஏற்கனவே இளையராஜா நிரூபித்து விட்டார் பல பாடல்களில், அவரே பாடி. வாரிசு இன்னொரு முறை […]