காசியில் குமரகுருபரர்

This entry is part 6 of 6 in the series 18 மே 2025

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1                                                          குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார்.  சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி  கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள்  பேசும் ஆற்றலை அடைந்தான். […]

காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து

This entry is part 4 of 6 in the series 18 மே 2025

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  சைவ உலகின் முதன்மையர்  காரைக்காலம்மையார்.  தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே  முதலானவர். முதன்மையானவர் ஆவார்.  அவரின் பாடல்களில்  சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய  மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி  ஆகியவற்றில்  செழுமை  மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் […]

கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ்  உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்

This entry is part 3 of 6 in the series 18 மே 2025

முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  திருவாடானை தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல்  மக்களின் வாழ்க்கை,  பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம்  ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய  இன அடையாளக் குறியீடாகும்.  தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ்  வளர்ச்சி என்பதும்  மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது.  தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் […]

குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

This entry is part 3 of 7 in the series 11 மே 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா பெரியகுளம், தேனி. தமிழ்நாடு. குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை முன்னுரை குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது. வாழ்வியல் விழுமியங்கள் படைப்பாளர்களின் […]

எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு

This entry is part 2 of 7 in the series 11 மே 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா. ஆய்வுச்சுருக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் […]

இன்குலாப் என்றொரு இதிகாசம்

This entry is part 7 of 7 in the series 27 ஏப்ரல் 2025

-ரவி அல்லது .           இயற்கையின் மீதான தன் ஆதுரங்களை அதன் அழகியலில் கவிதைகள் வடித்த வண்ணம் பெரும் முயற்சிகள் இங்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உணர்வுத் தெளிவில் உந்தும் கவிதைகள் வந்த படியே உள்ளது. இது ஒருபுறம் இருக்க. ஒரு கவிஞனின் கவிதைகள் அவன் கடந்து வந்த காலத்தின் பாடுகளை அதன் கூறுகளை பேசிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்தக் கவிஞன் இச்சமூகத்தின் பால் கொண்ட வாஞ்சையின் வெளிப்பாடு எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் […]

கம்பரின் ஏரெழுபது

This entry is part 2 of 7 in the series 27 ஏப்ரல் 2025

முனைவர் ந.பாஸ்கரன், இணைப் பேராசிரியர், தமிழாய்வு துறை, பெரியார் கலை கல்லூரி, கடலூர்-1.  ஏரெழுபது  கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்றாலே கம்பர் இயற்றிய கம்பராமாயணம் என்னும் நூல் தான் நினைவுக்கு வரும். ஆனால், கம்பர் தன் கவித் திறமையால் சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏர் எழுவது என்று பல நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் உழவர்களைப் பற்றியும் உழவுத்தொழிலைப் பற்றியும் மிக விரிவாகவும் அழகாகவும் எழுதியுள்ள ஏரெழுவது என்னும் நூலின் சிறப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.  ஏரெழுபது […]

இதற்குத்தானா?

This entry is part 9 of 9 in the series 30 மார்ச் 2025

    ஜெயானந்தன் ஆண் மீது விழும் சாட்டையடி யாக, யமுனாவின் கேள்வி,  ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின்,  காம சொருபத்தை காட்டும், ஒரு லேபிள்.  தி.ஜா.வும் இந்த லேபிளுக்குள் அடைப்பட்டவர் என ஏற்றுக்கொண்டுதான், இதை எழுதியிருக்க முடியும். ஒருவித, உடல் சார்ந்த எதிர்பார்ப்பு எப்பவும், தி.ஜா..எழுத்தில் வெளியே வர துடிக்கும் நப்பாசையின் உணர்ச்சிக்குரலகவே கேட்கின்றது . ஆண் தேடும் பெண், கடைசியில் அடைவது பெண்ணைத்தானே.  இதில், காமம் ஒருவித இலக்கிய நயத்தோடு நடந்து, ஒரே பெண்ணை […]

ஶ்ருதி கீதை – 4

This entry is part 5 of 5 in the series 16 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.41] அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின் வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில், அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்! ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல்  காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம்  கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே! நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா? உன் ஸ்வாஸமேயான மறைகளாம் […]

ஶ்ருதி கீதை – 3

This entry is part 3 of 3 in the series 9 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும்  உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து  குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர்  உன்னிடமே நீர்க்குமிழி போல்.  குமிழும் நுரையும் அலையும் அரியாமே! ஊனுயிர் உலகம் ஈஶன் பரமனாம் நீயே அன்றோ? ஆழிசேர் ஆறுகள் பெயருரு அற்றுப்போவது போல், மலைத்தேனுள் வெவ்வேறு மகரந்த மலரின்பம் மறைந்து செறிந்திருந்தாற் போல், உயிர் உலகம் ஊழி உம்பர் உம்பர்கோன் ஏனையோர் பலரும் என்றும் மாறா […]