கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

This entry is part 23 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து  தாமும் […]

மிஷ்கினின் “ முகமூடி “

This entry is part 13 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சிறகு இரவிச்சந்திரன். Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin film என்பது புதுமொழி. முகமூடி அக்மார்க் தமிழ்ப் படம். ஆனால் டைட்டில் கார்டில் காட்டப்படும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்! புதுமை அத்தோடு குளோஸ். மற்றபடி, படத்தில் வருவது எல்லாம், வழக்கமான உட்டாலக்கடிதான். வழக்கமான கதைகள் இப்படி இருக்கும். அண்ணன் கடத்தல்காரன். தம்பி போலீஸ்காரன். இது எம் ஜி ஆர், நம்பியார், அசோகன் பார்முலா. ஒரே […]

தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

This entry is part 12 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பாஸ்கர் லக்ஷ்மன்  வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள் ஒரே குடும்பம் போல்தான் இருந்து வந்தார்கள். இன்று , குறிப்பாக, நகரங்களில் பக்கத்து வீட்டில்கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்குச்  செல்ல நேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு […]

அஸ்லமின் “ பாகன் “

This entry is part 8 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே ஒரு சைக்கிள் தான். வாய்ஸ் ஓவரில் கதை நகர்த்தும் உத்தி அரதப் பழசு. ஆனால் அந்த வாய்ஸ் ஒரு சைக்கிளுடையது என்றால் புதுசுதானே! அதுதான் பாகனின் ஸ்பெஷாலிட்டி. சித்தார்த்தின் “ காதலில் சொதப்புவது எப்படி “ யை, ரீ வைண்ட் பண்ணி, ஓட்டிப் பாருங்கள். அதில் சித்துவுக்கு பதிலாக ஸ்ரீகாந்தைப் போடுங்கள். பேக்கிரவுண்டை கிராமமாக […]

வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 37 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர். மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம்,  நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் […]

ஆர். பன்னீர்செல்வத்தின் “ 18 வயசு “

This entry is part 35 of 37 in the series 2 செப்டம்பர் 2012

சிறகு இரவிச்சந்திரன். ஒரு சிக்கலான முடிச்சை எடுத்துக் கொண்டு, ஓரளவு தெளிவாக கதை சொல்ல முடியுமென்றால், அந்த இயக்குனருக்கு ஓரளவுக்குத் திறமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளலாம். அது பன்னீர்செல்வத்தின் விசயத்தில் உண்மையும் கூட. ஆனால், மறை கழண்ட கதையா, கூப்பிடு பன்னீரை என்று திரையுலகம் ஏலம் போடும் ஆபத்தும் அவருக்கு இருக்கிறது. உஷார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரபல தயாரிப்பாளர். ஆனால், அதற்காக, தன் மகன் ஜானிக்கு, இம்மாதிரி வேடங்களையே அவர் தேர்ந்தெடுத்தால், நிக் மகன் […]

குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 34 of 37 in the series 2 செப்டம்பர் 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள். சிந்திக்கத் தக்கவை. […]

பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 33 of 37 in the series 2 செப்டம்பர் 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார். சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும். அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய […]

பழமொழிகளில் கனவும் நினைத்தலும்

This entry is part 32 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      மக்கள் கனவினை, ‘சொப்பனம்’ என்று வழக்கில் வழங்குவர். மனிதனின் ஆழ் மனதில் பதியும் நிறைவேறா ஆசைகளே கனவாகப் பரிணமிக்கின்றன என்று உளவியலறிஞர்கள் கூறுவர். மனதை உள்மனம், வெளிமனம், ஆழ்மனம் என்று பகுப்பர். இவ் ஆழ் மனதிலேயேஆசைகள், ஏக்கங்கள் உள்ளிட்டவைகள் பதிவுகளாகப் பதிகின்றன. இத்தகைய பதிவுகள் நாளடைவில் கனவுகளாக வெளிப்படுகின்றன. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தில் நிகழும் நிகழ்வுகளை எடுத்துரைக்கும் சாதனங்களாகவும் அமைகின்றன. இலக்கியங்களில் இடம்பெறும் கனவுகள் அனைத்தும் இலக்கிய உத்தியாக […]

இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்

This entry is part 25 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 “  உதிரி மனிதர்களின் உலகமும்,      சூழல் கேடற்ற நகரக் கனவும்”                                                      பிரபஞ்சன் திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான […]