திண்ணையின் இலக்கியத்தடம் – 25

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

செப்டம்பர் 4 2003 இதழ்
சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்- அசுரன்- நிலத்தடி நீரை மிதமிஞ்சி எடுப்பதால் நீராதாரம் பாதிக்கப் படுகிறது. குளிர்பான ஆலைகளின் கழிவுகள் நிலத்தை மாசு படுத்துகின்றன.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309048&edition_id=20030904&format=html )

இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ! தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பாமரன் ஒருவனின் சில கேள்விகள்- அக்கினிபுத்திரன் – சிங்கப்பூர் – (பாய்ஸ் படம் போன்ற) ஒரு மஞ்சளை சங்கரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309049&edition_id=20030904&format=html )

கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் – சி.ஜெயபாரதன் கனடா- பாரதியார் எழுதிய சோலை மலரொளியோ, உன் சந்தரப் புன்னகைதான். நீலக் கடல் அலையோ, உனது நெஞ்சின் அலைகளடா’ என்ற வரிகளில் ஒரு நளின ஒப்பணியை (Metaphor) காணலாம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309044&edition_id=20030904&format=html)

தெலுங்குப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – ருத்ர துளஸிதாஸ்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309041&edition_id=20030904&format=html )

செப்டம்பர் 11 2003 இதழ்:

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்- வைஷாலி
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203091111&edition_id=20030911&format=html )

அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள்’- எனக்குப் பிடித்த கதைகள்-76- பாவண்ணன் – பூச்சிகளும் சிறிய உயிரினங்களும் நம்மோடுதான் வாழ்கின்றன. ஆனால் நம் அச்சத்தாலும் அருவருப்பாலும் வேட்டையாடப் படுகின்றன. ஒரு நாள் இரவுத் தூக்கத்தைப் பூச்சிகளால் ஒருவன் தொலைப்பதே கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309113&edition_id=20030911&format=html )

செப்டம்பர் 18, 2003 இதழ்:

பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்- வெங்கட் ரமணன்- ஓரினக் காதலை வெளிப்படுத்தும் பல படைப்புகள் பூபேனுடையவை. தமது ஆண் நண்பர் இறந்த சில நாட்களில் இவரும் காலமானார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309189&edition_id=20030918&format=html )

பல்லாங்குழி – காஞ்சனா தாமோதரன்

ஏழு மயில் ஏழு
இரு புறமும் கல் பதித்த தங்க மயில் ஏழு
வாதாடிச் சூதாடி வந்த மயில் ஏழு
வரிசையுள்ள அத்தை மக்கள்
வந்து விளையாடையிலே
அது என்ன?
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203091812&edition_id=20030918&format=html)

என் படிப்பனுபவமும் படைப்பனுவமும் – சுந்தர ராமசாமி- என் படிப்பிலிருந்தோ படைப்பிலிருந்தோ புதுமைப் பித்தனைப் பிரிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309183&edition_id=20030918&format=html )

அக அழகும் புற அழகும் – சரத் சந்திரரின் ‘ஞானதா’ எனக்குப் பிடித்த கதைகள்-77- பாவண்ணன்- உடலழகில்லாதவள் என்று தன்னை நேசித்தவளை மணக்காத ஒருவன் காலப் போக்கில் அவளின் நல்ல குணங்களை எண்ணி அவளைக் கைப்பிடிக்கிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309181&edition_id=20030918&format=html )

செப்டம்பர் 25,2003 இதழ்: காத்தவராயனுக்குக் காத்திருப்பது – அ.முத்துலிங்கம்- கனடாவின் ரொறொன்ரோ நகரின் பேர்ச் மவுண்ட் வீதியில் உள்ளரங்கத்தில் இலங்கையின் தொன்மை முறை மாறாது நடந்த காத்தவராயன் கூத்து பற்றிய விமர்சனம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309251&edition_id=20030925&format=html )

மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞானியின் தவறான கருத்துக்கள்-சி.ஜெயபாரதன் BE(Hons), P.Eng(Nuclear) கனடா – செர்னோபில் போலக் கல்பாக்கம் அணு உலை வெடித்தால் சென்னை நகரே அழியும் என்றும் கல்பாக்கப் பணியாளருக்குப் புற்று நோய் வருகிறது என்றும் முற்றிலும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகிறார் ஞாநி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20309252&edition_id=20030925&format=html )

புரிந்து கொள்ள முடியாத புதிர்- ஜெயந்தனின் ‘அவள்’ – எனக்குப் பிடித்த கதைகள் -78- தன்னை அடித்துக் கொடுமைப் படுத்தும் கணவனை போலீஸிடம் ஒப்படைக்க கிராமத்து முக்கியஸ்தர் முயலும் போது அந்தக் குடிகாரக் கணவனின் மனைவி “அவன் நான்கு நாட்களில் செத்து விடுவான் காவல் நிலையத்தில்” என்று மன்றாடி அவனைக் காப்பாற்றுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60309252&edition_id=20030925&format=html)

அக்டோபர் 2,2003 இதழ்: ராஜ் கௌதமனின் “சிலுவை ராஜ் சரித்திரம்” – நாவல் அறிமுகம்- பாவண்ணன்- நாவலில் ஏராளமான பாத்திரங்கள் இடம் பெறுகிறார்கள். அவர்களுடன் உருவமில்லாத இன்னொரு பாத்திரமும் எல்லாத் தருணங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அதுதான் ஜாதி என்னும் பாத்திரம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310022&edition_id=20031002&format=html)

மனத்தில் படியும் ஞாபகங்கள்- சுரேஷ் குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள்’- எனக்குப் பிடித்த கதைகள்-79- அக்கம்பக்கத்திலும் நாம் நடமாடும் போது, பயணிக்கும் போது கண்ணில் படுவோர் பலர். அவர்கள் நம்முள் ஒன்றின் குறியீடாக மாறி மேலெழும்புகிறார்கள். ஒரு தனி இளைஞன் மனதில் காண்போர் ஏற்படுத்தும் நினைவலைகளை மையப் படுத்திய சிறுகதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310021&edition_id=20031002&format=html )

பஸ்கால் கிஞ்ஞார்- (Pascal Qignard)- நாகரத்தினம் கிருஷ்ணா- காலத்தோடு உள்ள உறவைத் துண்டித்துக் கொண்டு எழுதுவது எத்தனை பேருக்கு சாத்தியம்? இம்மனிதர் ஜெயித்திருக்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310025&edition_id=20031002&format=html )

அக்டோபர் 10 2003 இதழ்: அடைப்புகளுக்கு அப்பால்- PS நரேந்திரன் ABCD (American Born Confused Desi) குழந்தைகளைப் பற்றி மனதில் தைக்கும் படியான சிறுகதை அ.முத்துலிங்கத்தின் ‘அடைப்புகள்’
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20310108&edition_id=20031010&format=html )

ஷார்ல் பொதலேர் – Charles Baudelire- நாகரத்தினம் கிருஷ்ணா
இங்கே
பச்சைக் குழந்தைகளின் பரிமளம்
இனிமைக்குக் குழலோசை
ஈரமனத்திற்குப் பசும் புல்வெளிகள்
முரணாக
குற்றம் பணம் சாதனையென
முற்றுப் பெறாத குணங்கள்
மனமும் உணர்வும் சுமப்பதைக் காண
அத்தரும் ஜவ்வாதும்
அகிற்புகையும் கஸ்தூரியும்
கானம் பாடிடும்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310102&edition_id=20031010&format=html)

நெருக்கமும் ஆர்வமும்- (வனம் புகுதல் கவிதைத் தொகுதி- கலாப்ரியா)- பாவண்ணன்- கசப்பும் வேதனையும் மிகுந்த வாழ்க்கையின் பல கணங்கள் இத்தொகுதியில் சித்திரமாகி இருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310107&edition_id=20031010&format=html)

அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து’- எனக்குப் பிடித்த கதைகள்-80- பாவண்ணன்- மலையின் மீது கிடா வெட்டி சாமி கும்பிடும் விழாவில் மேல்சாதியினர் முதலில் கறி, கொழுப்பு எல்லாவற்றையும் உண்டு ஏழைகளுக்கு எலும்புகளையே விட்டு வைக்கின்றனர். பசியுடன் மலையேறி ஏறி வந்த ஏழை கர்ப்பிணிப் பெண் பசியில் மயக்கம் அடைகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310104&edition_id=20031010&format=html )

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- Francois Rebalois – நாகரத்தினம் கிருஷ்ணா- ரபெலே தம் முன்னோர்களின் பிரபுத்துவ வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு விட்டு பாதிரியாரான பிரெஞ்சு பட்டினத்தார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310164&edition_id=20031016&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -81- ஒரு கணக் காட்சி-சிவசங்கரியின் “வைராக்கியம்”-பாவண்ணன்- மேல்தட்டுப் பெண் தன் வேலைக்காரன் வராததால் நாய்க்காக மாட்டிறைச்சி வாங்கப் போய் மாடு கொன்று வெட்டப்படும் கோரத்தைப் பார்த்து நாய்க்கு இனி மாட்டுக்கறி கிடையாது என்று முடிவெடுக்கிறாள். வேறு எதையும் சாப்பிடாமல் அது பட்டினி கிடக்கவே தன் வைராக்கியம் நீங்கி வாங்கித் தருகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310161&edition_id=20031016&format=html)

அக்டோபர் 23,2003 இதழ்:
அண்ணாதுரை மரணத்தின் போது ஜெயகாந்தன் பேசியது: அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷாரின் கையாளாக அறிமுகமானவர் என்ற உண்மை மறைந்து விடுவதில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203102310&edition_id=20031023&format=html)

பாய்ஸ்- ச்சீ- போடா பொறுக்கி அல்லது பின்நவீனத்துவக் குழப்பம்- யமுனா ராஜேந்திரன்
எந்தவிதமான படைப்புத்தன்மையுமற்ற, ஒற்றைத் தன்மை கொண்ட சுஜாதா மற்றும் சங்கர் என்கிற இரு உலகவயமாதல் பிரகிருதிகளின் நோக்கில், பையன்களைக் காமாந்தகாரர்கள் மட்டுமே என்று சித்தரித்த அவர்களது நடவடிக்கைக்கு எதிர்வினையே காட்டாத பெண் கூட்டம் தமிழ் சமூகம் என்று சித்தரித்த படம் தான் இது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203102312&edition_id=20031023&format=html)

அக்டோபர் 30, 2003 இதழ்:
அனா அரந்த் -பாஸிஸம் – ஸ்டாலினியம்- யமுனா ராஜேந்திரன்- சிவில் சமூகம், மக்கள் பங்கேற்பு , மனித உரிமைகள் போன்ற அக்கறைகள் உலகெங்கும் அதிகரித்திருக்கும் நிலையில் ஸ்டாலினை இன்றைய மார்க்ஸீய வாதிகள் யாரும் உயர்த்திப் பிடிப்பதில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20310307&edition_id=20031030&format=html )

மாயக் கவிதை- விக்கிரமாதித்யன்- தமிழில் இனி மாயக் கவிதைகளே வேண்டும். போதும் போதும் என்னுமளவுக்கு எதார்த்தக் கவிதைகளே குவிந்து கிடக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310302&edition_id=20031030&format=html )

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன்- மிலன் குந்தேரா (Milan Kundera)- நாகரத்தினம் கிருஷ்ணா- எழுத்தாளனின் பணி சத்தியத்தைப் போதிப்பதல்ல. சத்தியத்தை அறிவது.- மிலன் குந்தேரா
()

எனக்குப் பிடித்த கதைகள்- 83- செய்யாத தவறும் தியாகமும் – திசா.ராஜுவின் “பட்டாளத்துக்காரன்”- இரு குழந்தைகளுக்கும் ஒரு வயதான முன்னாள் ராணுவ வீரருக்கும் இடையிலான அன்புப் பிணைப்பைப் பற்றிய கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60310301&edition_id=20031030&format=html)

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *