ஒரு கவிதை எழுத வேண்டும் !

This entry is part 8 of 13 in the series 14 பெப்ருவரி 2021

 

 

மனம் 

சொல் முளைக்காத 

பாழ்நிலமாய்

என்னைப் பார்த்து

நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது

 

எங்கே என் சொற்கள் 

என்ற கேள்வி

பதில் கிடைக்காமல் தவிக்கிறது

 

ஒரு கவிதை எழுத வேண்டும்

யோசித்துப் பார்க்கிறேன்

என்னுள் சொற்கள்

கூடுவதும் கலைவதுமாய்க்

கணங்கள் நழுவுகின்றன

 

மனம்

பழைய பக்கங்களைப்

புரட்டுகையில் 

எல்லாம்

மங்கி மறைகின்றன

 

அறுவடைக்குப் பின்னான

வயல் ஒன்று

முட்கள் முளைத்த முகமென

என் மனத்தை ஆக்ரமிக்கிறது

 

ஒரு நீண்ட காத்திருத்தல்

எதையும் தரவில்லை

 

கடவுள் மனம் போல்

முரண்டு பிடிக்கின்றன

என் சொற்கள்

கவிதை வரம் மறுத்து …

 

ஒரு கவிதை எழுத வேண்டும்

காத்திருக்கிறேன். ..

 

                     +++++++

 

Series Navigationபெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை 
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *