பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா ! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர் ! ! முருகபூபதி எமது தமிழ் சமூகத்தில் தமது தொழில்சார் அனுபவங்களை படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு. எனினும், தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா அனுராதா க்ருஷ்ணஸ்வாமி வினோத்குமார் சுக்லா கவிதைகள் ராமலக்ஷ்மி கட்டுரைகள் கலை/ஆளுமை/இலக்கியம் வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம் ரா. கிரிதரன் ’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ் எஸ்ஸார்சி சமூகம்/புத்தக அறிமுகம் தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும் சுந்தர் […]
ரவி அல்லது மிடறுகளின் சுவையில் மிதந்து கிடக்கிறது வெளி. வெற்றுக் கோப்பையின் இறுதிப் பருகலில்தான் உயிர்த்திருக்கிறது தருணம் அழைத்துவிட்ட ஏதோவொன்றுக்காக கவனம் கொடுத்து. யாவற்றுக்குமான இந்த அனுசரணையில் இச்சொற்களுக்கு மட்டும் தேவையாக இருக்கிறது கதகதப்பூட்டும் மௌனம் இத்தனிமையின் ஓய்வைப்போல. *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
வசந்ததீபன் ஞானஸ்தானம் பெறுகிறார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம் தரித்திரம் வாசற்படியில் படுத்துக் கிடக்கிறது நொய்யல் அரிசியை கஞ்சி வைக்கிறாள் கிழவி நீண்ட நாள் பட்டினி முடிவாகும் நாயுக்கு கொஞ்சம் ஊற்ற நினைத்தாள் பூசணிக்கூடால் ஆன தம்பூரா மீட்டி வருகிறான் குறி சொல்லி பண்டாரம் தெருக்களில் இரந்து பாடுகிறான் தோளில் ஊசலிடும் துணித்தொங்கலில் காற்றுதான்நிரம்புகிறது ஆட்டை உரிக்கிறார்கள் தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள் பக்குவமற்ற அவனால் பிரச்சனை பக்குவமான இவனால் குழப்பம் அலைகள் ஓய்வதில்லை […]
நவநீத கிருஷ்ணன் லட்சம் கோடி காதல் கண்ட கரை கொண்டவள் நீ காதலர் கொஞ்சும் காட்சியின் சாட்சி நீ நுரை தள்ள திரும்பத் திரும்பக் கரை வந்து நோகிறாய் நீ பேர் ஆழம் பெரு அகலம் கொண்டு பேரன்பு என்ன என்று புத்தி சொல்கிறாய், அதை கத்தி சொல்கிறாய் கேளா காதும் பாரா கண்ணும் கொண்ட மானுடர் நாங்கள் என்றறியாத நீ
சோம. அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் […]
வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது துயர் பாடுகள்ஆறு கடந்து போகிறதுகாற்று கடந்து போகிறதுகாலமும் கடந்து போகிறதுவாடிய மலர்கள் இயற்கைக்கு சொந்தம்வாடாத மலர்கள் மனிதனுக்கு சொந்தம்வாடியும் வாடாமலும் பூத்தபடி மலர்கள்பாதைகள் நிறைய போகின்றனஊருக்குள் போகும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லைபாதைகளுக்கு முன்னால் நின்றிருக்கிறேன்நெருப்பை தொட்டுப் பார்த்தான்நெருப்பாயிருந்ததுநெருப்பு நெருப்பாய் இல்லாமல் வேறு எதுவாக இருக்கும்இருக்கும்பெருங்கதையாடல்பெருந்திணைப்பாடல்பெருஞ்சூறையாய் வீசுகிறதுஇழப்பதற்கு எதுவுமில்லைபெறுவதற்கு ஏராளம் உள்ளதுஅடிமைச் சங்கிலிகளை அறுத்தெறிவோம்.மழை பொழியட்டும்மனங்களெங்கும்மானுடம் செழிக்கட்டும்விண்மீன்களை பார்க்கிறேன்தேவதைகள் கண்கள் சிமிட்டுகிறார்கள்சாமரம் வீசுகிறது காற்றுமவுனங்களுக்கும்வார்த்தைகளுக்கும்இடையே தீராத உரையாடல்கள். (2) இணக்கமற்ற […]
ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு உயராத நீர் மண்டத்திற்கு ஒரு மரக் கன்று நடலாம்தான் எம் கண்ணீரில் அது துளிர்த்தால். கருப்பின தேசத்தில் காகிதத்தைக் காட்டியே கனிம வளங்களை களவாடிச் செல்லுங்கள் கேப் டவுன்களை கிரீடமாக தருவித்து. நீங்கள் வீணாக்கும் தண்ணீர்த் துளிகளின் விலைகள் அறியாதபொழுதில் நாங்கள் விண் நோக்கிக் கையேந்துகிறோம் […]
ஆர் வத்ஸலா கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் எனத் தோன்றியதாலும் அச்சத்துடன் போலி வீரப் புன்னகையுடன் மெய்நிகர் கூட்டத்தில் நுழைந்தேன் பிரபல கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார் பட்டறை நடத்துபவர் அவர் முகம் ஒரு கோணத்தில் சதா பிரம்புடன் நிற்கும் (அதை அவர் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும்) எனது இரண்டாம் வகுப்பாசிரியர் கிட்டு […]
வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.41] அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின் வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில், அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்! ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல் காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம் கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே! நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா? உன் ஸ்வாஸமேயான மறைகளாம் […]