கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில்…

பிடிமான மஜ்ஜைகள்

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப் புரிதல்களை யாதொன்றும் அபகரிக்கவில்லை என்பதே நேசத்தின்…

கவிதைகள் 

திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த  புண்ணியம் கோடி  பாத மலர்களைத் தேடி  தஞ்சம் அடைந்தது உனை நாடி  இடை உரசும்  நெட்டை நெடுங் கூந்தலும்  நளினம் புகுந்த பாதமும்  அடக்கி ஆளும் எழிலின் சாயலே மைபொதி விழி…
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை. நாள் & நேரம்:  செப்டம்பர் 17, 2025 புதன்…
பாச்சான் பலி 

பாச்சான் பலி 

ஆர் சீனிவாசன்  வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா காடுகளில், மனதின் ஆழத்தில், தொன்மங்களின் மாயங்களில் , கருப்பு - வெளுப்பு வேறுபாடுகளில் பரம்பொருள் கிடைக்காதபோது சமூகத்தின் நிர்பந்தங்களால்…

சந்திரமுக சகமனுஷி

1 _ அநாமிகா  நீண்ட நேரமாக அந்த நடைவழி சுவர் ஒரமாகவே நின்றுகொண்டிருந்தாள். பெண் என்றும் சொல்லமுடியாத பெண்மணி என்றும் சொல்ல முடியாத 30 வயதின் விளிம்பைத் தொட்டிருப்பவளாகத்தோன்றியது, கதையில், கவிதையில் ,நிலா முகம், என்று வாசிக்கநேரும்போதெல்லாம் மனதில்அறிவுபூர்வ, தர்க்கபூர்வ சிரிப்பாய் ஒன்று தோன்றும். அதெப்படி அத்தனை திருத்தமான வட்டமாய் ஒருமுகம் இருக்க முடியும்? அதுவும், நிலவின் ’இரண்டறக் கலந்த’ அம்சமான கறையும் இருக்க வேண்டுமே- அதுவும் அழகா என்ன....’  அறிவு என்பது எல்லாவற்றின் சகலவிதமான சாத்தியப்பாடுகளுக்கும் தன்னை திறந்துவைத்திருப்பது.இறுக மூடிக்கொண்ட நிலையில் ’இதுதான், இது மட்டும்தான் இங்கே சாத்தியம்; சாத்தியமாகும்;சாத்தியமாக வேண்டும்’ என்று மண்டையின் உள்ளெங்கும் கனமேறி அதன் விளைவாய் இறுதியில்கவிழ்ந்தே யாகவேண்டிருப்பதா அறிவு.... ”ஒரு சேர், இல்ல, ஸ்டுல் தரவா உட்காந்துக்க?” சட்டென்று முகத்தில் நெகிழ்வு ததும்ப என்னை நோக்கித் திரும்பி புன்சிரித்தாள். நிலவின் கறை போல்இடது கன்னத்தில் தேமல் படலம் இருந்தது போல் தோன்றியது. நடைவழியின் இந்த முனையில்இருந்த எங்கள் வீட்டில் இருந்து அந்த முனைக்கு அருகில் இருந்த அவளை பாதி நிஜ உருவாகவும்பாதி நிழல் உருவாகவும்தான் காண முடிந்தது அவள் புன்சிரித்தபோது வரிசைப்பற்கள் ஜொலித்தன. A THING OF BEAUTY IS A JOY FOR EVER’ என்ற வரி இருந்தாற் போலிருந்து ஞாபகம் வந்தது.  ”பரவாயில்ல, வேண்டாம்மா”  ”ரொம்ப நேரமா நிக்கிறீங்களே....”  ”பரவாயில்லீங்கம்மா”, என்று மீண்டும் அதே புன்சிரிப்போடு கனிவாய் மறுத்து மறுபுறம் திரும்பி,கால்மாற்றி நின்றுகொண்டாள்.  அந்தப் பக்கமாக வந்து செக்யூரிட்டி சிவநாதன் மெல்லிய குரலில் என்னிடம் கூறினார்: “வேலையிலிருக்கையில சித்தாள் உட்காரக்கூடாதுமா - மேஸ்திரி கோவிச்சுக்கவாரு”  ’அதற்காக எத்தனை நேரம் இப்படி கையில் சிமெண்ட் சட்டியோடு கால் கடுக்கநின்றுகொண்டிருப்பது மாதவிலக்கு நாட்களிலுமா...? அந்தி சாய்ந்து வீடு திரும்பிய பின்கணவருக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் இருப்பின்அவர்களுக்குமாக சுடச்சுட சமைத்துப்போட்டு.... இரவில் கணவன் தினமும் உடலுறவுக்குக்கட்டாயப்படுத்துவானோ.... சே, ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எண்ணவேண்டும்? வீதியின்இருமருங் கிலும் எத்தனை சுடச்சுட பிரியாணி _ பரோட்டா கடைகள்! கணவன் எல்லோருக்குமாகஅன்போடு வாங்கிவரக்கூடும்... நாளும் உழைத்துக் கனிந்த கட்டுடல்களாக இருக்கும் கணவனும்மனைவியும் ’செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சமும் தேகமுமாக கூடலில் திளைக்கக்கூடும்...அப்படியே இருக்கட்டும்.....’ அவள்…

பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக

இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில்  ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம்…

தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்

வணக்கம், நலமா? காற்றுவெளி இதழின் சிறப்பிதழ் வரிசையில் விரைவில் இங்கிலாந்து வாழ் ஈழத்து தமிழ்ப்படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இதழாக அச்சில் வரவுள்ளது. படைபுக்கள்(கதைகள்) காற்றுவெளி இதழில் 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமலும்,யூனிக்கோட் எழுத்துருவிலும்(எழுத்துப் பிழைகள் இன்றி) அமைதல் வேண்டும்.காற்றுவெளி இதழின் பார்வையில் படாமலே…

பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாவண்ணன் எழுதிய சாம்பல் சிறுகதை. கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் நான்காவது நிகழ்ச்சி இது. நாள் & நேரம்:செப்டம்பர் 3, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணிசெப்டம்பர்…

இலக்கியப்பூக்கள் 349

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் ( www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 349 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,  கவிஞர்.சுகந்தி தாஸ்(தமிழகம்)(கவிதை:மீள்…