author

வாசல் தாண்டும் வேளை

This entry is part 4 of 6 in the series 16 ஜூன் 2024

ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி  கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து  திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.வேப்ப மரத்தடியில்  நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கிவந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும்  சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டுநாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. […]

தனிமையின் இன்பம்

This entry is part 6 of 7 in the series 9 ஜூன் 2024

சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது.             வாயில் கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது.           காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் […]

காலாதீதன் காகபூஶுண்டி

This entry is part 4 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமிஇது ஏற்கனவே நடந்திருக்கிறது.முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது. புதிதாக ஒன்றும் இல்லை. காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்காலாதீதன் நான் கூறுகிறேன்!கோடி பிரம்மாக்களை உண்டுவிட்டேன்.எத்தனை தடவை இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நடந்தாயிற்று! பார்த்தாயிற்று!எத்தனை தடவை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குகீதோபதேஶம் செய்தாயிற்று! எத்தனையெத்தனை தேவதைகள் அஸுரர்கள் மானுடர்கள் தாவர-ஜங்கமங்களனைத்தையும்,எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டேன்.எத்தனையெத்தனை மஹாப் பிரளயங்கள்,எத்தனையெத்தனை மஹா ஸ்ருஷ்டிகள்,எத்தனையெத்தனை மஹா ஸ்திதிகள்!காலம் வாழ்க்கையை […]

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி !

This entry is part 2 of 7 in the series 9 ஜூன் 2024

முருகபூபதி Preview attachment வ. ந. கிரிதரனின் கதைத் தொகுப்பு.jpg Preview attachment வ.ந. கிரிதரன்.jpg வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.சரியாக ஓராண்டுக்கு […]

`கிழக்கினை எதிர்கொண்டு’ – கெகிறாவ ஸுலைஹாவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

This entry is part 1 of 7 in the series 9 ஜூன் 2024

கே.எஸ்.சுதாகர் அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள்கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதியமுயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாககெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்தபடைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றியதகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் […]

சாதனா எங்கே போகிறாள்

This entry is part 6 of 6 in the series 2 ஜூன் 2024

வி. ஆர். ரவிக்குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு மணி ஏழு.  கார்த்திகை மாத காரிருள்,  சீக்கிரமே இருட்டிவிட்டது.    வெளியில் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. பிளாட்பார்ம் எண் ஆறிலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ்  இன்னும் இருபது நிமிடங்களில் ஹைதராபாத்திற்கு  புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் கவனத்திற்கு என்று ஒலி பெருக்கியில் மீண்டும்  மீண்டும் அறிவிப்பு முழங்கிக்கொண்டிருந்தது. பல பெட்டிகளுடனும் லக்கேஜ்களுடனும் பயணிகள் வேக வேகமாக அவரவர் கம்பார்ட்மெண்டை நோக்கிச்  சென்று கொண்டிருந்தனர்.      இருக்கை உறுதி ஆகாதவர்கள் […]

சந்தைக்குப் போனால்…

This entry is part 5 of 6 in the series 2 ஜூன் 2024

                                                                                          மீனாட்சி சுந்தரமூர்த்தி                    விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை.  கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும். குளித்து முடித்துத் தயாராகி , முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது […]

பெருமை

This entry is part 3 of 6 in the series 2 ஜூன் 2024

வாழப்போகும் பெருமையை விதை சொன்னது வாழும் பெருமையை மரம் சொன்னது வாழ்ந்த பெருமையை விறகு சொன்னது மூன்று பேரும் இறைவனைக் கேட்டனர் ‘எங்களில் யார் பெரியவன்’ இறைவன் சொன்னான் ‘உங்கள்முன் நான் சிறியவன்’ அமீதாம்மாள்

துருவன் ஸ்துதி

This entry is part 1 of 6 in the series 2 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி   ( சமஸ்கிருதத்திலிருந்து ஸ்ரீமத் பாகவதம் செய்யுளின் மொழிபெயர்ப்புகள் சில  ) துருவன் பகவானைப் போற்றுதல்: ௐ [ஶ்ரீம.பா-4.9.6] எனாவி உடல் உட்புகுந்து ஆட்கொண்டாய்! ஜடமாய் உறங்கும் பொறி புலன்கள் உயிர்ப்பித்து இயக்கினாய்! மூச்சானாய்! பேச்சானாய்! அறிவாற்றல் ஆன்மாவானாய்!  உயிருக்குயிரான பகவானே! உணர்வெனும் பெரும்பதப் புருடனே! போற்றி! போற்றி! ந [ஶ்ரீம.பா-4.9.7] ஒன்றேயான உறுபொருள் பகவன் நும் ஆத்மசக்தியால் அனாதி மாயா ஆற்றல்மிகு குணத்திரிபால் அகண்ட பேருணர்வால் அண்டங்கள் படைத்தும் அந்தர்யாமியாய் அவற்றுள் நுழைந்தும் வெவ்வேறு விறகு […]

யார்?

This entry is part 7 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி தபாலில் அனுப்பியுள்ளது விசித்திர விதைகளை சீனா அமெரிக்காவிற்கு. கண்டித்துள்ளார் அமெரிக்க உளவுத்துறையை கவனக்குறைவிற்காக அமெரிக்க ஜனாதிபதி. சுமந்து வந்தோமிங்கு விசித்திர வாதனா விதைகளை கவனக் குறைவினால். இங்கிருந்து மீண்டும் சுமந்து செல்வோம் இவ்விசித்திர வாதனா விதைகளை இதே கவனக் குறைவினால். உள்ளிருக்கும் உள்ளானை ஓயாது உள்கிறோமா, இல்லையா, என்று உளவு சொல்பவரும் உறங்குகிறார் இவ்வும்பரரங்கில். முரசுக் கட்டிலிலுறங்கும் இம்மோசிகீரனாரைக் கண்டிக்காமல் கவனமாகக் கவரி வீசும் தகடூர் எறிந்த இச்சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை யார்?