This entry is part 30 of 30 in the series 20 ஜனவரி 2013
இலக்கிய விமரிசகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் அவர்கள் 2011 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திறனாய்வு, மொழியியற்சிந்தனை, கவிதை, மொழிபெயர்ப்பு, கல்வித்துறை சார்ந்த கருத்தியல் உருவாக்கம் போன்ற பலதிறப்பட்ட பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு பேராசிரியர் ராமசாமி, கவி சிபிச்செல்வன், எழுத்தாளர் சபாநாயகம் ஆகியோர் கொண்ட நடுவர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் நுஃமான் அவர்களை நடுவர்குழு தெரிவு செய்தது. பேராசிரியர் நுஃமான் முப்பது நூல்களுக்கு ஆசிரியர். மொழியும் இலக்கியமும் (2006), மொழியியலும் […]
எஸ். ஹுசைன் மௌலானா 17வயதுச் சிறுமி அவள். கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம் மரணதண்டனை வழங்கி சவூதி அரசாங்கம் சரிஆ சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. மரணதண்டனை வழங்கி தீர்ப்புச் சொன்ன போது அவளுக்கு வயத 18 பூர்த்தியாகி இருக்கும். சவூதியின் சரிஆ( இஸ்லாமிய சரீஆ அல்ல அது) அதிகபட்சத் தண்டனையான மரணதண்டனையை வழங்கிய போது அது, ரிஸானாவின் வயதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. எத்தனையோ மனித உரிமை அமைப்புக்கள் வேண்டி நின்ற போதும் அத்தனையையும் வெகு சாதாரணமாக […]
கோவிந்த் கருப் விமர்சனம் அல்ல.. படிக்க வேண்டிய சில புத்தகங்களின் அறிமுகமே… புத்தகம் 1: திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும்.. முதலில் மலர்மன்னனின் நிர்பந்தமற்ற, எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற எழுதும் முறைக்கு வந்தனம். கடந்தகால பக்கங்களை புரட்டிப்பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். அவற்றை எழுத்தில் வடிப்பவர்கள் மிக மிகச் சிலரே.. அதிலும், பாப்புலர் சிண்ட்ரோம் ஆட்டிப் படைக்காமல் எழுதுபவர்கள் மிக மிக மிக சிலரே.. அதில் ஒருவர் மலர்மன்னன்… காலத்தில் தான் கடந்து வந்த பாதையின் […]
திருப்பூர் அரிமா விருதுகள் 2013 * ரூ 25,000 பரிசு திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 : முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் […]
நூல்கள் வெளியீட்டு விழா * திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு “ பனியன் நகரம்“ 2013 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல் 27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை: அரிமா கேபிகே செல்வராஜ் * முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி, சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன் சிறப்புரை: கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி, சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி, வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் […]
-ஜே.பிரோஸ்கான் – என் அருமைச் சகோதரியே ரிசானா உனது மரணம் உலக மக்களின் பேரிழப்பு. நேற்று நீ உறங்கிப் போன பின் அந்த அரேபியாவில் ~ரீஆ சட்டமும் தடுமாறி நின்றதாம் சரியா செய்யாததால். பதினேழு வயசு குழந்தை நீ பக்குவம் அறியா இளசு நீ மொழியும் தெரியா பறவை நீ இதையறிந்தும் அந்த அரேபியா தாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே சரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது அவள் செயல் கண்டு. நீ வருவாய் நீ வருவாய் என்ற […]
பிரபு கிருஷ்ணா நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக நின்டிருந்து இன்று வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின் கிளைகள் ஒவ்வொன்றும் தன் நினைவுகளை பகிர ஆரம்பித்தன தழைகளை கடித்த ஆடுகள் கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் காதல் பேசிய சரவணன் துர்கா அழுது தீர்த்த செல்லம்மா திருடியதை புதைத்த கதிரவன் பிள்ளை பெற்ற லட்சுமி என எல்லா கிளைகளும் தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு மிச்சமிருந்த கடைசி கிளை எதுவும் சொல்லவில்லை அநேகமாய் அது வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும் – பிரபு கிருஷ்ணா
கவிஞன் என்ற அடையாளத்திற்காக வளர்த்த குறுந்தாடி……. பக்கத்திற்கு பக்கம் பதிய வைக்க அழகிய புகைப்படம்……… சுயமாய் அச்சடித்து தொகுப்பாய் கொடுக்க தேவையான பணம்….. எல்லாவற்றையும் வசப்படுத்திய பின்பும் ஏனோ வசப்பட மறுக்கிறது கவிதை மட்டும்….! மு.கோபி சரபோஜி.
அர.வெங்கடாசலம் இந்தமாதம் பதினைந்தாம் தேதி ஜான்பென்னி குய்க் என்ற ஆங்கிலேயே பொறியாளருக்கு முல்லைப்பெரியார் அனைக்கட்டில் தமிழக அரசு கட்டியுள்ள மணிமண்டபம் திறப்பு விழா கண்டது. 2011 டிசம்பர் மாதம் அப்போதைய மதுரை ஆட்சியர் சகாயம் தேனி மாவட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த அறுபத்து மூன்று வயது விவசாயி வி.மாதவன் என்பவர் எழுதிய பத்து பக்கங்கள் கொண்ட ஜான்பென்னி குய்க்கின் வரலாற்றுப் புத்தகத்தை வெளியிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. அந்தச் செய்தி […]