author

I Am  an Atheist

This entry is part 5 of 6 in the series 23 மார்ச் 2025

சோம. அழகு தமிழ் வகுப்புகள் செம்மையாக நடந்து கொண்டிருந்தன. என் வகுப்பைச் சற்று சுவாரஸ்யமாக்கும் பொருட்டு பாடதிட்டத்தைத் தாண்டி சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தொடங்கினேன். தமிழின் தொன்மையைப் பற்றி, அத்தொன்மையைப் பறைசாற்றும் விதமாகக் கிடைத்திருக்கும் கீழடி, ஆதிச்சநல்லூர் சான்றுகள் பற்றி, பழமையானதாகக் கருதப்படும் லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மற்றும் கொரியன், ஆங்கிலம் போன்ற இன்ன பிற மொழிகளிலும் காணப்படும் தமிழ்ச்சொற்கள் பற்றி, பாவாணரின் சொல்லாராய்ச்சி மற்றும் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி, தமிழர் நாகரிகம் […]

  4 கவிதைகள்

This entry is part 4 of 6 in the series 23 மார்ச் 2025

வசந்ததீபன் (1) ஒரு வண்ணத்துப்பூச்சியின் புலம்பல்____________________________________________ வழிபாடுகள் இடர்பாடுகள்தொடருது  துயர்  பாடுகள்ஆறு  கடந்து  போகிறதுகாற்று  கடந்து  போகிறதுகாலமும்  கடந்து  போகிறதுவாடிய  மலர்கள்  இயற்கைக்கு  சொந்தம்வாடாத  மலர்கள்  மனிதனுக்கு  சொந்தம்வாடியும்  வாடாமலும்    பூத்தபடி  மலர்கள்பாதைகள்  நிறைய  போகின்றனஊருக்குள்  போகும்   பாதையை  கண்டுபிடிக்க  முடியவில்லைபாதைகளுக்கு  முன்னால்  நின்றிருக்கிறேன்நெருப்பை  தொட்டுப்  பார்த்தான்நெருப்பாயிருந்ததுநெருப்பு  நெருப்பாய்  இல்லாமல்  வேறு  எதுவாக  இருக்கும்இருக்கும்பெருங்கதையாடல்பெருந்திணைப்பாடல்பெருஞ்சூறையாய்  வீசுகிறதுஇழப்பதற்கு  எதுவுமில்லைபெறுவதற்கு  ஏராளம்  உள்ளதுஅடிமைச்  சங்கிலிகளை  அறுத்தெறிவோம்.மழை  பொழியட்டும்மனங்களெங்கும்மானுடம்  செழிக்கட்டும்விண்மீன்களை  பார்க்கிறேன்தேவதைகள்  கண்கள்  சிமிட்டுகிறார்கள்சாமரம்  வீசுகிறது காற்றுமவுனங்களுக்கும்வார்த்தைகளுக்கும்இடையே  தீராத  உரையாடல்கள். (2) இணக்கமற்ற […]

சொட்டாத சொரணைகள்

This entry is part 2 of 6 in the series 23 மார்ச் 2025

ரவி அல்லது சொட்டுச் சொட்டாக நிறைகிறது  நம்பிக்கை பாத்திரத்தில் துருப்பிடித்திருந்தாலும். யாரோ விதைத்த வினைக்கு அறுவடைகள் செய்யும் எமக்கு வாய்க்கிறது மண் கவலமாக மகசூல்கள். வெந்து தணிந்ததில் வெறுப்புகள் கொண்டு  உயராத நீர் மண்டத்திற்கு ஒரு மரக் கன்று நடலாம்தான் எம் கண்ணீரில் அது துளிர்த்தால். கருப்பின தேசத்தில் காகிதத்தைக் காட்டியே கனிம வளங்களை களவாடிச் செல்லுங்கள்  கேப் டவுன்களை கிரீடமாக  தருவித்து. நீங்கள்  வீணாக்கும் தண்ணீர்த் துளிகளின் விலைகள் அறியாதபொழுதில் நாங்கள்  விண் நோக்கிக் கையேந்துகிறோம் […]

கவிதைப் பட்டறை 

This entry is part 1 of 6 in the series 23 மார்ச் 2025

ஆர் வத்ஸலா  கவிதைப் பட்டறையில் கலந்து கொள்ள  தலையை, மன்னிக்கவும், பெயர் கொடுத்து விட்டேன், பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததாலும் அதில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் எனத் தோன்றியதாலும் அச்சத்துடன்  போலி வீரப் புன்னகையுடன் மெய்நிகர் கூட்டத்தில் நுழைந்தேன் பிரபல கவிஞர்களின் கவிதைகளை வாசித்தார்  பட்டறை நடத்துபவர் அவர் முகம் ஒரு கோணத்தில்  சதா பிரம்புடன் நிற்கும்  (அதை அவர் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும்) எனது இரண்டாம் வகுப்பாசிரியர் கிட்டு […]

ஶ்ருதி கீதை – 4

This entry is part 5 of 5 in the series 16 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.41] அனந்தா! விண்ணகத் தேவரும் விண்டிலர் நின் உண்மை உருவின் வீச்சையும் விரிவையும்! வியப்பென் எனில், அங்கிங்கெனாதபடி நீக்கமற நீள் விசும்பெலாம் நீயே நிறைந்தும் நீயே முழுதும் நின்னை இயம்ப இயலா எல்லையில்லா விஶ்வரூபம் நின் ஸுஸ்வரூபம்! ககன வெளியில் பவனமுந்த பாய்ந்தோடும் தூசித்துகள் போல்  காலச்சகடமுந்த கோடி கோடி அண்ட பிரம்மாண்டம்  கூடி நின்று நின் திருவுந்தியுள் சுற்றிச் சுழன்று செல்லுதே! நின் பேராளுமையின் எல்லைதான் ஏது பேரருளாளா? உன் ஸ்வாஸமேயான மறைகளாம் […]

நீ தான் என் ஜீனி

This entry is part 4 of 5 in the series 16 மார்ச் 2025

ஆர் சீனிவாசன் ஒப்புக்கொள்கிறேன். நான் தான் உரசலை ஆரம்பித்தேன். வேலை அழுத்தத்தின் பின் விளைவுகளை நாவு வரை செல்ல அனுமதித்திருக்க கூடாதுதான். வீட்டிற்கு வந்தவுடனே அலர் “ஏன் இவ்வளவு லேட்டு. இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்னு நினைச்சோமே” என்றதிற்கு முகம் சுளித்திருக்க கூடாததுதான். “ஏன் இப்படி…” என வாக்கியத்தை முடிக்காமல் ‘உம்’மென முகத்தை வைத்துக்கொண்டு போனவளை சமாளிக்க முடியாமல் அன்று மாலை முழுவதும் மூலைக்கு ஒருவராக கழித்தோம். படுக்கையில் சீண்டி கொஞ்சம் அத்து மீறலாமா என நினைத்தேன். ஆனால் […]

3 கவிதைகள்

This entry is part 3 of 5 in the series 16 மார்ச் 2025

வசந்ததீபன் (1)  உதிர்ந்த இலை உலர்ந்த கனவு உடைந்து சிதைகின்றன கல் தீபத்தை ஏற்ற முனைந்தேன் துளிர்த்த ஒளி  சட்டென்று காணாமல்போகிறது காற்றை தின்றிட துடிக்கிறேன் பேருந்து புறப்பட்டு விடும் நீர்ததும்பும்   விழிகளோடு நினறிருக்கிறாய் நிரப்ப முடியாத இடைவெளிகள் பெருக்கெடுக்கிறது ஆதியில் வார்த்தை இருந்தது  அப்புறம் காணாமல் போனது மீண்டும் ஆடுகளின் பேச்சாய் மீண்டது பாடல்களின் வரிகளில்   புதைந்து போன   கவிதையே…!  இசையின் அலைகளுக்களுக்குள் கரைந்து போனதேன்…?   பாம்பு நல்லதாம் கொன்றவர்கள் கணக்கில்லை அது இறந்ததற்கு வருத்தப்படணுமா […]

மேன்மை தாங்கிய மெய்கள்

This entry is part 1 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது உடைகள்மாறும் பொழுதுஅதுஉலவுவதற்கு சாத்தியமாக அமைந்தது.உணவுகள் மாறும்பொழுதுஉற்சாகமாக இருந்தது.நினைவுகளைஞாபகிக்க முடியாமல்நடப்பவைகள்யாவும்நிரம்பியபொழுதுநாகரீகமெனத் தோன்றியது.அழுத்த விசைகளுக்குஆட்கொண்டபொழுதுஅடுத்த தலைமுறைவளர்ந்து நின்றுஅயலகனாகஆச்சரியம் தந்தது.அவ்வப்பொழுதுதானஊர்ப் பயணங்கள் அங்கேயும்ஒன்ற முடியாதஅவஸ்தைகளைக் கொடுத்தது.அயலகத்தின் பிரஜையாகமாறிப்போன பொழுதும்அவர்கள்அந்நியராகவேப்பார்த்ததுஅச்சத்தைக் கொடுத்தது.ஆதிச் சரடைஅடையும் ஆசைகள்துளிர்த்த போதுபெயர் மட்டுமேதங்கிகண்ணாடிக்குள்சிக்கிய மீன்காவந்தில் இருப்பதான பொழுதாகநீந்தி நீந்திவெளிவர முடியாதுவாழ்க்கையாவருக்கும்மாறிப்போனது.இப்பாடுகளுக்கிடையில்‘மாப்ளை வேலை என்னாச்சு.’ ‘மகளுக்கு மாப்பிள்ளை என்னாச்சு ‘ போன்றகேள்விகளுக்குபதில் சொல்லியேமத்திய வயதைக்கடந்தவர்களுக்குவெளிச் சொல்ல முடியாதவேதனையில்அன்றாடங்கள்மிகைஅலுப்பைக் கூட்டுகிறது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com நன்றி:அயலக வாழ்க்கையைஅங்கலாய்த்து அங்கிருக்கும்நண்பர் தேனி பாபு அவர்கள் கவிதை எழுதச்சொன்னதற்கு.

சுவைக்க வைத்த பாவிகள்

This entry is part 2 of 5 in the series 16 மார்ச் 2025

ரவி அல்லது ஆசையாக எட்டிப் பார்க்கிறது. சுவை மொட்டுக்கள் உள் நாக்கிலும் எச்சிலூற.  குரலெடுத்து கூவினாலும் குயிலை ரசிக்க முடியவில்லை கண்ணி வைக்கும் மனதைத் தாண்டி கறியின் சுவை கண் முன் நிழலாடுவதால்.  *** –ரவி அல்லது.  ravialladhu@gmail.com

ஶ்ருதி கீதை – 3

This entry is part 3 of 3 in the series 9 மார்ச் 2025

வெங்கடேசன் நாராயணசாமி [ஶ்ரீம.பா.10.87.31] ஆக்கலுமில்லை! காத்தலுமில்லை! அழித்தலுமில்லை! எங்குமெதுவும் எவரும் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை! பிறப்பில்லா காளியும் காளையும்  உன் உளவாக்கலால் கூடிக் குழைந்து  குணத்திரிபால் பல உயிர்களாய்த் தோன்றினர்  உன்னிடமே நீர்க்குமிழி போல்.  குமிழும் நுரையும் அலையும் அரியாமே! ஊனுயிர் உலகம் ஈஶன் பரமனாம் நீயே அன்றோ? ஆழிசேர் ஆறுகள் பெயருரு அற்றுப்போவது போல், மலைத்தேனுள் வெவ்வேறு மகரந்த மலரின்பம் மறைந்து செறிந்திருந்தாற் போல், உயிர் உலகம் ஊழி உம்பர் உம்பர்கோன் ஏனையோர் பலரும் என்றும் மாறா […]